வேற்றுமையில்
ஒற்றுமை
சொல்லித்தரும்
வைபவம்
இந்தக் கொலு!
சைவமும்
வைணவமும்
ஒன்றென
நிரூபிக்க
சிவனும்
ஹரியும்
ஒன்று சேரும்
வைபவம்!
ஆணும்
பெண்ணும்
முதியவரும்
குழந்தையும்
அனைவரும்
ஒன்றாக
கூடிக்குழவி வாழச்
சொல்ல வந்த
வைபவம்
இந்தத் கொலு!
மண்ணாலும்
மரத்தாலும்
கல்லாலும்
உலோகத்தாலும்
நிறத்தாலும்
உடையாலும்
செல்வத்தாலும்
வேறுபட்டாலும்
ஒன்று கூடி
ஒரே இடத்தில்
வாழச் சொல்ல வந்த
வைபவம்