Wednesday, 24 September 2025

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில்
ஒற்றுமை 
சொல்லித்தரும்
வைபவம்
இந்தக் கொலு! 

சைவமும் 
வைணவமும்
ஒன்றென
நிரூபிக்க
சிவனும்
ஹரியும்
ஒன்று சேரும்
வைபவம்!

ஆணும்
பெண்ணும்
முதியவரும்
குழந்தையும்
அனைவரும் 
ஒன்றாக
கூடிக்குழவி வாழச்
சொல்ல வந்த
வைபவம்
இந்தத் கொலு! 

மண்ணாலும்
மரத்தாலும்
கல்லாலும்
உலோகத்தாலும்
நிறத்தாலும்
உடையாலும்
செல்வத்தாலும்
வேறுபட்டாலும்
ஒன்று கூடி 
ஒரே இடத்தில்
வாழச் சொல்ல வந்த
வைபவம்
இந்தக் கொலு!

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...