உள்ளக் கிடக்கையை
உதடுகள்
மறைக்கலாம்
கண் மறைக்குமோ?
இலை
மறைக்கும்
கனியை
வாசம்
காட்டிக் கொடுப்பது
போல
என்மீது
கொண்ட
நேசத்தை
உன் கண்கள்
என்னிடம்
சொல்லி விடுகிறது
ஆதலால்
காதலை
மறைக்க
நினைக்காதே
தோற்றுப்போவாய்!
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment