Sunday, 19 October 2025

உமா


                                  (1)

அவசரக்காரி

பதினேழு
வயதில்
காதலியானாள்

முப்பத்தேழு
வயதில்
விதவையானாள்

எல்லாவற்றிலும்
அவசரம்
இந்த உமாவுக்கு! 

                                  (2) 
கண்களால்
காவலா மது? 

                                 (3)
கந்தனைப்
போற்றுவதற்கு
பதில்
தாயைப்
போற்றும்
மகள்! 
தாயிற்சிறந்த
கோவில் இல்லை
என்கிறாளோ? 

                            (4)
அம்மா
இந்த
வேல்முருகன்
மிகவும்
பொல்லாதவன்!

வேலை வேண்டி
விண்ணப்பம்
வைத்தேன்!

அவனோ
வள்ளிக்கும்
தெய்வானைக்கும்
வயதாகிவிட்டது

உன் வேல்விழியில்
மயங்கினேன்
என்னை
விவாகம்
செய்யத் தயாரா
எனக் கேட்கிறான்

சிலம்பம்
தெரியுமென
சட்டென சொல்லி
அவன்
வேலெடுத்து
சுழற்றி
மண்டையில்
ஒரு போடுபோட்டு
உறவுமுறையில்
நான் உன் தங்கை
உமையாளின்
மகள் எனச்
சொன்னாயா?

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...