Monday, 27 October 2025

அம்மு எனும் அம்மா

அம்மா
தேடாதவரை
எதுவும்
தொலைவதில்லை

அம்மு
சொல்லாதவரை
தரவு
தொலைவதில்லை

பிறந்தநாள்
திருமணநாள்
நிழற்படம்
என
அத்தனையும்
சேகரித்து
தேவைப்படும்போது
தரும்
தரவுப்பெட்டகம்.

நினைவுத்
துகள்களாய்
எங்களை
சுமந்து
அவ்வப்போது
மகிழ்ச்சி
துளிகளைத்
தூவும்
தரவுமேகம்!

இன்பத்தை
எமக்கு அருளி
துன்பத்தை
தனியாக
எதிர்கொண்ட
தைரியசாலி!

அம்மாக்களுக்கு
அம்மா ஆன
அம்மம்மா
எங்கள் அம்மு!

❤❤

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...