Monday, 1 November 2021

பி.......ரிவு

நிஜத்தில் நெருங்கவும் இல்லை

நினைவில் நீங்கவும் இல்லை

எழுத்தும் வலையும்

இணைத்தது சில  காலம்

பிரிவு மீண்டும்.......

நினைவுகள் தொடரும்

நிழல்களாய்

அழுவதா சிரிப்பதா

சுகம் ஒன்று வந்தால் 

மற்றது போகிறது

சமநிலையில் மனம் 

வாழ்த்து வராது

நகைப்பு வராது

அரசியல் வராது

நடப்பு தெரியாது

வலிகள் தெரியாது

வானம் பார்த்த பூமியாய்

வாழ்க்கை கழியும்

.

.

.

.

பெரும் மூச்சுடன்

வாழ்கவளர்க!

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...