Friday, 29 October 2021

குறட்டை

தூக்கம் கலைந்த இரவில்
தொலைதூரத்தில் கேட்கும் 
வாகன சத்தமும், 
கொசுவின் சத்தமும்
கடிகாரத்தின் சத்தமும்
காற்றாடியின் சத்தமும்
குழந்தையின் முனகல் சத்தமும்
தொந்தரவாய் இருந்தது மாறி
சுகமாய் வடிவெடுத்தது
காரணம் ......
அருகில் கேட்கும் 
உன் குறட்டை யும்
உன் வியர்வை வாசமும்

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...