தூக்கம் கலைந்த இரவில்
தொலைதூரத்தில் கேட்கும்
வாகன சத்தமும்,
கொசுவின் சத்தமும்
கடிகாரத்தின் சத்தமும்
காற்றாடியின் சத்தமும்
குழந்தையின் முனகல் சத்தமும்
தொந்தரவாய் இருந்தது மாறி
சுகமாய் வடிவெடுத்தது
காரணம் ......
அருகில் கேட்கும்
உன் குறட்டை யும்
உன் வியர்வை வாசமும்
No comments:
Post a Comment