Monday, 16 May 2022

மறுப்பு



ஊரெல்லாம் உன் வம்பிருக்க
நீ வீடு வந்து சேரும்வரை
வாசலிலே நான் காத்திருக்க
காலையும் மாலையும்
கீச்சலில் கழிக்கிறாய்
மதியநேரத்தில்
நேர்காணல் தருகிறாய்
மிச்சநேரத்தில்
தொ(ல்)லைபேசி அழைப்பு 

காய்கறி வாங்கவும்
துணிமணி துவைக்கவும்
துளியும் உதவாமல்
கண்நோக்கி களியாமல்
காதல்மொழி பேசாமல்
இடைவளைத்து கொஞ்சாமல்
முகம் பிடித்து கெஞ்சாமல்
பிறந்தநாளும் மணந்தநாளும்
வருடந்தோறும் மறக்கிறாய்
கனவு கலைந்து விழித்தேன் 

உன் பின்னால் வந்து
ஒரு பயனும் இல்லை
எட்டியே நின்றுவிடு
மணவாளன் ஆசைவிடு
உன் மணவாட்டி ஆகி
மருகிநிற்க ஆசையில்லை
தள்ளிநில் என்னவனே
தவறியும் மணக்காதே
தொழிலையே தொழுதுசெல்
இருவருக்கும் நல்லது

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...