Thursday, 26 May 2022

நான் யார்

நான் யார் ? 

பதிலே வராது என
தெரிந்தும் கேள்விகேட்கும்
முட்டாள் நான் 

படிப்பாயா என தெரியாமல்
பதிவு செய்யும்
பைத்தியம் நான் 

படிக்காதது போல் நீ
நடிப்பது தெரிந்தும்
பின்தொடரும்
முட்டாள் நான் 

உதாசீனம் செய்வது
உணர்ந்தும் உனை
உதறிவிட மறுக்கும்
தாய் நான் 

நீண்ட நெடிய
பெருமூச்சு விடும்போது
இவன் போகட்டும் வெளியே
ஆசைப்படுகிறேன் 

அடுத்த நொடியில்
உள்நுழைந்து
உயிர்காற்றாய்
நிறைகிறாய் 

நான் ஏன் இப்படி
நிலையில்லாமல்
தவிக்கிறேன் 

நான் யார் புரியவில்லை
உனக்கு தெரிந்தால்
சொல்லேண்டா! 

யாரோ !

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...