Sunday, 13 November 2022

#குறள்_1082 : நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு,தானைக்கொண் டன்ன துடைத்து

இடதாய் தலைசாய்த்து
குறும்பாய் பார்த்து
மனதுக்குள் மழை தந்தாய்
இடுப்பில் கைவைத்து
முழுதாய் முறைக்கையில்
நானொன்றும் செய்யலடி
கதற வைத்தாய்
வலப்பக்கம் திரும்பி
எங்கோ வெறிக்கையில்
சாரிடி சாரிடி நூறுமுறை 
சொல்லவைத்தாய்
கண்கள் சந்தித்த
நொடிப்பொழுதில்
தீராத நோயுற்றேன்
பாவம் நான் விட்டுவிடு!
எத்தனை முறை 
போர்தொடுப்பாய்
எத்தனை வகை
சேனை வைப்பாய்.


No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...