Sunday, 13 November 2022

#குறள்_1083 : பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்,பெண்டகையால் பேரமர்க் கட்டு.

எமனும் அவளும்
ஒரு ஜாதி
என்னை கொல்வதில் 
சரிஜோடி
வாழ்ந்தது போதும்
வா என்றான்
வாழ்ந்து பார்ப்போம் 
வா என்றாள்
கருத்த உருவம்
கயிறை வீச
கரியவிழிகளோ
வேலை வீசின
இருவரும் எனக்கு
நிம்மதி தருவர்
ஏனோ என்மனம்
கருவிழியை சேர்ந்தது

(2)
கொஞ்சியும் கெஞ்சியும்
நிதானமாக கொல்வாள்
நித்தமும் முத்தம்
சொர்க்கவாசல்
நித்தமும் யுத்தம்
மரணவாசல்
இன்ஸ்டால்மென்டில்
இனிப்பும் கசப்பும்
எமனே காதலியாய்
எனை ஆளவந்தது

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...