Sunday, 13 November 2022

#குறள்_1086 : கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்,செய்யல மன்இவள் கண்.

கோபம் வழிகின்ற
தாபம் தருகின்ற
கண்ணிடமிருந்து
எனை காப்பாற்ற
புருவமே உனக்கு
கையூட்டாக
லேக்மீ மை தரவா
நைக்கா மை தரவா
அவள் கண்கள்
எனை திண்ணும் முன்
கரைசேர்த்து காப்பாற்று!
கண்களுக்குத்தான்
கருணையில்லை
வில்லே உனக்குமா?

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...