Wednesday, 30 November 2022

#குறள்_1105 : வேட்ட பொழுதின் அவையவை போலுமே,தோட்டார் கதுப்பினாள் தோள்.

உன் விரல்கள் 
மீட்டும்
வீணை இசையை
தினந்தோறும்
கேட்கலாம்
திகட்டாது
ஆனால்
உன் தோள்
சாய்ந்து அதை
கேட்கும்போது
இன்னொருமுறை
ஜனனிப்பேன்
உன் இடப்புற தோள்
காலியாகத்தானே
இருக்கிறது
என்னையும்
ஏந்திக்கொள்
மறுத்தால் 
நீதிமன்றம் 
செல்வேன்
இடஒதுக்கீடு கேட்டு!

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...