Wednesday, 30 November 2022

#குறள்_1105 : வேட்ட பொழுதின் அவையவை போலுமே,தோட்டார் கதுப்பினாள் தோள்.

உன் விரல்கள் 
மீட்டும்
வீணை இசையை
தினந்தோறும்
கேட்கலாம்
திகட்டாது
ஆனால்
உன் தோள்
சாய்ந்து அதை
கேட்கும்போது
இன்னொருமுறை
ஜனனிப்பேன்
உன் இடப்புற தோள்
காலியாகத்தானே
இருக்கிறது
என்னையும்
ஏந்திக்கொள்
மறுத்தால் 
நீதிமன்றம் 
செல்வேன்
இடஒதுக்கீடு கேட்டு!

No comments:

Post a Comment

விஜி EEE

ஆண்டு அதிகமாக முதுமை வரும் உலக நியதி! அதை உடைத்தெறிந்த மார்கண்டேயி எங்கள் விஜி! பாவாடைச் சட்டையில் பள்ளி செல்லும் மாணவி சேலை கட்டி நி...