Wednesday 7 December 2022

குறள்_1112 : மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்,பலர்காணும் பூவொக்கும் என்று.

வள்ளுவரே
உம் பாட்டில்
பொருட்பிழை
உண்டு!
இருநாளில்
வாடும்
சாதா மலரோடு
என்னவளின்
கண்மலரை
எங்ஙனம்
ஒப்பிடலாம்?
உயிர்தந்து
உயிர்நீக்கும்
ஜீவமலரை
குறைத்து
கூறலாமா?
நோயாகி
மருந்தாகும்
அற்புதம்
அன்றோ
அவள்கண்கள்!
விரகமாகி
விருந்தாகும்
உணவன்றோ
அவள் கண்கள்!
பிழையை திருத்து
இல்லையேல்
பொற்றாமரை
குளத்தில்
மீண்டுவர
நேரிடும்!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...