Friday 9 December 2022

#குறள்_1114 : காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்,மாணிழை கண்ணொவ்வேம் என்று. 

சன்னமாய்
தலைகவிழ்ந்த
குவளையை
கண்டதும்
உறுதிசெய்தேன்
நீ இந்தவழியில்
பயணித்திருக்க
வேண்டும் என்று!
உன் கண்களை
கண்டு அதற்கு
காய்ச்சல் வந்ததோ!
கண்ணாடி கண்களின்
ஒளிபட்டு கூசி
தலைகவிழ்ந்ததோ!
உன் கண்களால்
பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை
கூடிக்கொண்டே
போகிறது!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...