Tuesday, 27 December 2022

குறள் : 1132


காதல் சொல்ல
வழியின்றி
காணும் இன்பம்
துளியின்றி
ஊமை கண்ட
கனவாய்
எவ்வளவுதான்
பொறுப்பது?
மயக்கும்விழி
பாராமல்
மங்கை உனை
தீண்டாமல்
வாழ்தல்
ஒரு வாழ்வா?
மடலேறும் வழி
அறியேன்

நண்பனே!
மாமனின்
எண்ணைக்கொடு
மச்சானின்
விலாசம் கொடு
மணம் பேசி
முடித்து
மறுவேலை
பார்ப்பேன்!

No comments:

Post a Comment

பார்கவி வீட்டு கொலு

வேற்றுமையில் ஒற்றுமை  சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு!  சைவமும்  வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...