Sunday, 1 January 2023

குறள் : 1137

கரைமீது
கொண்ட
காதலால்
ஓடிவந்த
அலை
ஊர்பழிக்கும்
என்றெண்ணி
அச்சத்தால்
பின்னோக்கி
செல்வதுபோல
அவர்மீது
கொண்ட
காதலால்
உறவு பழிக்கும்
என்றெண்ணி
அச்சத்தால்
தலைகவிழ்ந்தேன்!

அவருக்கு
என்னை
பிடிக்குமோ
பிடிக்காதோ
அறியாமை
துரத்தியதால்
மடப்பெண்ணாய்
ஒதுங்கினேன்!

அவர் காதலோடு
நோக்கினால்
எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி
முன்னின்று
ஒத்திகை பார்த்தேன்!
அவரை கண்முன்னே
பார்க்கையில்
வெட்கத்தில்
ஒளிந்து கொண்டேன்!

அவர் போன்ற
உருவம் ஒன்று
தூரத்தில்
நடக்கையில்
அவரோ
என்றெண்ணி
ஓடிச்சென்று
பார்த்தேன்
அடுத்தவர்
என்றறிந்து
அசிங்கமாய்
உணர்ந்தேன்

அச்சம் மடம்
நாணம்
பயிர்ப்பு
அவரோடு
சேர்வதில்
தடையாய்
இருந்தது!

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...