Monday, 16 January 2023

குறள் 1151

(1)
அணிகலன் கேளேன்
பட்டாடை கேளேன்
பகட்டுவாழ்வு கேளேன்
செல்லாதே எனைவிட்டு!
கூரைவீடு கூழ்
கந்தை நீ போதும்
செல்லாதே எனைவிட்டு!
நீ சென்று வென்று
வரும்போது 
நான் இருப்பேனோ
இறப்பேனோ
வேண்டாம் அன்பரே
என்னோடு தங்கிவிடு!

(2)
பிரியும்போது
என் கண்ணும்
உன்னோடு வருமே!
அப்புறம் நான்
இந்த உலகை
எப்படி காண்பேன்?
துணிகள் நிரம்பிய
பெட்டிக்குள்
என் இதயம் 
ஒளிந்து வருமே!
பின் எப்படி
நான் வாழ்வேன்?
நீ பறக்கும்
விமானம் என்
மூச்சுக்காற்றில்
பயணிக்குமே
எங்ஙனம்
நான் வாழ்வது?
ஆதலால்
போகாதே!

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...