Monday, 16 January 2023

குறள் 1151

(1)
அணிகலன் கேளேன்
பட்டாடை கேளேன்
பகட்டுவாழ்வு கேளேன்
செல்லாதே எனைவிட்டு!
கூரைவீடு கூழ்
கந்தை நீ போதும்
செல்லாதே எனைவிட்டு!
நீ சென்று வென்று
வரும்போது 
நான் இருப்பேனோ
இறப்பேனோ
வேண்டாம் அன்பரே
என்னோடு தங்கிவிடு!

(2)
பிரியும்போது
என் கண்ணும்
உன்னோடு வருமே!
அப்புறம் நான்
இந்த உலகை
எப்படி காண்பேன்?
துணிகள் நிரம்பிய
பெட்டிக்குள்
என் இதயம் 
ஒளிந்து வருமே!
பின் எப்படி
நான் வாழ்வேன்?
நீ பறக்கும்
விமானம் என்
மூச்சுக்காற்றில்
பயணிக்குமே
எங்ஙனம்
நான் வாழ்வது?
ஆதலால்
போகாதே!

No comments:

Post a Comment

அரசவை நிகழ்வு

சேரநாட்டு அரசவையில் ஆலோசனை நடந்தது! குளிர்பதன ஆலைக்கு பொறுப்பாளர் தேர்வு அனுபவமிக்க சிப்பாயை சேனாதிபதி பரிந்துரைத்தார்! சிப்பாயோ ...