Thursday, 19 January 2023

குறள் 1155

உடைந்த
கண்ணாடி
ஒட்டாது
பூமி சேர்ந்த
மழைத்துளி
வானம்
திரும்பாது
கடந்துபோன
நொடிகள்
திரும்ப
கிடைக்காது
மகிழ்ச்சி
நிரம்பிய
இளமை
திரும்பவராது
கறந்தபால்
மீண்டும்
மடிசேராது

இயற்கை
அப்படியெனில்
பிரிந்தபின்னர்
நாமும் ஒன்று
சேர இயலாது
உன் பிரிவின்பால்
நான் இறந்து
விடக்கூடும்
பிறகு நாம்
சேரவே இயலாது
ஆகவே
என் உயிர்
காக்கும்
காவலரே
காதலரே
என்னை
பிரியாதீர்
பிரிந்தால்
நாம் ஒன்று
சேர்வது
கடினம்

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...