Saturday, 21 January 2023

குறள் 1157

கழண்டுவிழும்
வளையல்
பொட்டு வைக்காத
நெற்றி
உறக்கமின்றி
சிவந்த கண்
பூச்சூடாத
தலைமுடி
பொருத்தமில்லாத
கலரில் உடை
கேட்ட கேள்விக்கு
தாமதமாக
வரும் பதில்
புன்னகை மறந்த
உதடுகள்
கோலம் இல்லாத
கூட்டப்படாத வாசல்
மிக சுத்தமான
அடுப்புமேடை

இவைகள் போதாதா
அவன் பிரிவை
எடுத்துசொல்ல???

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...