Saturday 21 January 2023

குறள் 1157

கழண்டுவிழும்
வளையல்
பொட்டு வைக்காத
நெற்றி
உறக்கமின்றி
சிவந்த கண்
பூச்சூடாத
தலைமுடி
பொருத்தமில்லாத
கலரில் உடை
கேட்ட கேள்விக்கு
தாமதமாக
வரும் பதில்
புன்னகை மறந்த
உதடுகள்
கோலம் இல்லாத
கூட்டப்படாத வாசல்
மிக சுத்தமான
அடுப்புமேடை

இவைகள் போதாதா
அவன் பிரிவை
எடுத்துசொல்ல???

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...