Saturday 21 January 2023

குறள் 1156

பிரியாதே
சொன்னாள்
ஐந்து மாதங்கள்
அதிகம் என்றாள்
........
வருகிறேன்
சொல்லி
கிளம்பினான்
பிரிந்தநாள்
செப்டம்பர் ஏழு
தேசம்காக்க
கங்கணம்
கட்டினான்
நாள்தோறும்
பயணம்
காடுகள்
மலைகள்
ஆறுகள்
வயல்வெளிகள்
கட்டிடங்கள்
மக்கள்
அத்தனையும்
கடந்தான்
வழியெங்கும்
பிரச்சினைகள்
தீர்வுகள்
அழுகைகள்
சிரிப்புகள்
எதிர்பார்ப்புகள்
கோபங்கள்
இத்தனை உணர்வுகள்
ஆளுகையில்
காதலை
காதலியை
மறந்தான்
இறுதியில்
ஐனவரி 30ல்
கடமை முடித்து
மனநிறைவோடு
வீடுதிரும்பினான்
காதலி மூலையில்
வேலைசெய்வதாக
பாவனை செய்தாள்
Ouchh.. சொல்லி
காலைதூக்கி
கட்டிலில் அமர்ந்தவனை
ஓடிவந்து
பாதம் நோக்கி
கண்ணீரால்
நனைத்தாள்
தாடியும் மீசையும்
தடவி அழுதாள்
போகாதே
சொன்னேன்
கேட்டியா
கல்மனம்
கொண்டது
உன்மீது
உனக்குள்
வாழும் என்மீது
உனக்கு
வலிக்கும்
என்றால்
எனக்கும்தானே
வலிக்கும்
மக்களை
நேசித்து
உன்னை
மறந்தாய்
உனக்குள்
வாழும்
என்னை மறந்தாய்
அன்பில் மாற்றம்
உணர்கிறேன்
ஐம்பது சதவீதம்
எனக்கு தந்தாய்
மீதி சதவீதம்
தேசத்திற்கு தந்தாய்
எனக்கான
உன்அன்பு
குறைந்துதான்
போனது
முன்னர்போல
நீயில்லை
புலம்பினாள்
ராகுலின் காதலி!!!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...