Sunday, 5 February 2023

குறள் 1172

கால்சிலம்பை
கழட்டிதந்து
கோவலன் 
சாவுக்கும்
அவன் நீதிக்கும்
காரணமாகி
கலங்கி நின்ற
கண்ணகிபோல
காதலுக்கும்
பிரிவுக்கும்
காரணமான
கண்கள்
கலங்கி
நிற்பதேன்?
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
சாட்சியாகும்
நிலவைப்போல
என் கண்களும்
சேர்தலுக்கும்
விலகலுக்கும்
சாட்சியாவதேன்?

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...