Tuesday, 7 February 2023

குறள் : 1174

கடலே கடலே
உப்பு நீர் 
தருவாயா
கடனாக அல்ல
காசு தருகிறேன்
உப்பு தயாரித்து
டாடாவிற்கு
விற்கிறேன்
என் கண் வடித்த 
நீரெல்லாம்
ஆவியாகி
உப்பு மூட்டை
சேர்த்தேன்
விற்றேன்
இன்னும் 
வேண்டுமென
ரத்தன் கேட்கிறார்
என்னிடம்
கண்ணீர்
தீர்ந்துபோனது
இரண்டு லாரி
தண்ணீர்
இன்றைக்கே
அனுப்பி வை!

Comments : 

No comments:

Post a Comment

சுகந்தி

சுகவாசி சுகபோகி சுதந்திர தேவி!  எனது வலியை அறிந்தவள் வறுமையை பகிர்ந்தவள் செழிப்பில் மகிழ்ந்தவள் அகம் புறம் அனைத்தும் அறிந்தவள் உர...