Friday, 3 March 2023

குறள் : 1198

பிரியும்போது
தந்த முத்தத்தின்
ஈரம் காயாமல்
தினந்தோறும்
கண்ணீரால்
நனைத்து
காத்துவருகிறேன்
தெருமுனைவரை
திரும்பி திரும்பி
பார்த்து சென்றதும்
முனையில்நின்று
கையசைத்து
சென்றதும்
கண்ணைவிட்டு
அகலாமல்
காட்சியாக நிற்கிறது
'இன்று வருகிறேன்'
என்ற இனிப்பான
செய்தி கேளாமல்
கற்சிலையாய் நான்!

Comments : 

No comments:

Post a Comment

ப்ளு பெர்ரி

ப்ளு பெரியின் கவலை!  என்னதான் திட்டுதிட்டாய் பான்ஸ் பவுடர் அப்பிக்கொண்டாலும் வசுவின் கலருக்கு சமமாக முடியவில்லையே... தாழ்வு மனப்பான்மையில் த...