Friday 3 March 2023

குறள் : 1198

பிரியும்போது
தந்த முத்தத்தின்
ஈரம் காயாமல்
தினந்தோறும்
கண்ணீரால்
நனைத்து
காத்துவருகிறேன்
தெருமுனைவரை
திரும்பி திரும்பி
பார்த்து சென்றதும்
முனையில்நின்று
கையசைத்து
சென்றதும்
கண்ணைவிட்டு
அகலாமல்
காட்சியாக நிற்கிறது
'இன்று வருகிறேன்'
என்ற இனிப்பான
செய்தி கேளாமல்
கற்சிலையாய் நான்!

Comments : 

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...