Saturday, 3 June 2023

குறள் : 1290

எவ்வளவு தான் தாகமோ
எத்தனை நாள் காத்திருப்போ

எதிர்பாராத நேரத்தில்
இத்தனை முத்தம் தகுமோ
முத்தங்கள் யாவும்
ரத்த சிவப்பில் தந்தாளே

இழுத்து அணைத்ததில்
எலும்புகள் பலநூறாய் சிதற
தணித்துகொண்டாள் 
தன் தாகம் முழுதும் 

பேராசைக்காரி அந்த 
மரணதேவதை!

சண்டாளி பார்வையில்
அன்பே இல்லையே!

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...