Tuesday, 4 July 2023

குறள் 1303

உரசிய தீக்குச்சி
உடனே அணைகிறது

ஏற்றிய தீபம்
எண்ணை தீர அணைகிறது

எண்ணத்தில் ஏற்பட்ட தீயும்
காயம் வரும் முன்
அணைந்திடவேண்டும்.
இல்லாது போனால்
எதுவும் இருக்காது

ஏக்நாத்தும் அஜீத்தும்
எடுத்துகாட்டு அல்லவா


தவறு யார்மீது
ஆராய்ச்சி கூடாது
ஒருவர் தோற்றால்
இருவரும் ஜெயிக்கலாம்
ஒருவர் ஜெயித்தால்
இருவரும் தோற்பார்கள்

அணைத்துவிடுங்கள்
தீயை அவளை அவனை 
அவர்களை

இல்லையேல்
எரிந்து சாம்பலாகும்
உறவும் உள்ளமும்....

No comments:

Post a Comment

குறள் 1271

உள்ளக் கிடக்கையை உதடுகள்  மறைக்கலாம் கண் மறைக்குமோ?  இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...