Tuesday, 4 July 2023

குறள் 1303

உரசிய தீக்குச்சி
உடனே அணைகிறது

ஏற்றிய தீபம்
எண்ணை தீர அணைகிறது

எண்ணத்தில் ஏற்பட்ட தீயும்
காயம் வரும் முன்
அணைந்திடவேண்டும்.
இல்லாது போனால்
எதுவும் இருக்காது

ஏக்நாத்தும் அஜீத்தும்
எடுத்துகாட்டு அல்லவா


தவறு யார்மீது
ஆராய்ச்சி கூடாது
ஒருவர் தோற்றால்
இருவரும் ஜெயிக்கலாம்
ஒருவர் ஜெயித்தால்
இருவரும் தோற்பார்கள்

அணைத்துவிடுங்கள்
தீயை அவளை அவனை 
அவர்களை

இல்லையேல்
எரிந்து சாம்பலாகும்
உறவும் உள்ளமும்....

No comments:

Post a Comment

இலைகளின் நடனம்! ❤

மழைத்துளிகள் பெல்லட் குண்டுகளாய் இடைவிடாமல் பொழிந்தபோதும்  மாணவர்களைப்போல நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்டு  இசைந்தாடுகின்றன  இலைகள்! மழை ஓயுமா...