Tuesday 4 July 2023

குறள் 1302

பார்வைகள் வேறாக
கருத்துக்கள் முரண்பட
மூக்குக்கு மேல் கோபம்
இருவருக்கும்
இரண்டுநாள் மௌனமொழி
மூன்றாம்நாள் மாலையில்
காபியோடு பக்கோடா
டேபிள்மீது அவள் வைக்க
பிஸ்தா குல்பியை
லேப்டாப் மீது அவன் வைக்க
அத்தோடு முடிந்தது
அவர்களுக்கான ஊடல்
அளந்து போட்ட உப்பாக!

அரசியல் வேண்டாம்
அவன் சொல்ல
அதெல்லாம் முடியாது
இவள் சொல்ல
வாய்மொழி சூட்டின்
செல்சியஸ் குறைய
நான்குநாட்கள்
ஐந்தாம்நாள் வீட்டுக்கு
நண்பர் குடும்பம் வந்து நிற்க
சிக்கன் வாங்கி வரவா
மீன்வாங்கி வரவா
என்பதோடு ஊடல் முடிந்தது

அளவாக பெய்யும் மழை
அளவாக சுடும் சூரியன்
அளவாக குளிரும் நிலா
அளவான ஊடல் கலை
அத்தனையும் அழகு
அளவுக்குள் அடங்கிநின்றால்!
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு!

No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...