Monday, 20 November 2023

அன்பு மொழி

சித்திரைக்கு முந்தியவள்,
நித்திரையை நிந்தியவள்,
மந்திரியாய் ஆளுபவள்,
முகத்திரையாய் மிளிர்பவள் ! 

குரல் கேட்க ஏங்குபவள்,
கான குரல் இசையாய் ஒலிப்பவள்,
இன்ப நிலா காண்பதற்கே,
தேன் மழையில் நனைப்பவள் !

மலர்ச்செண்டு போதும் என்பாள்,
மறக்காமல் வாழ்த்து கேட்பாள்,
உறங்கச்சொல்லி கதைப்பாள்,
விடியும்மட்டும் சுவைப்பாள் !

அன்பு மொழி உரைப்பாள்,
உரிமைக்கு மட்டும் சண்டையிட்டு,
உதடெல்லாம் கடிப்பாள்,
இவளன்றி நானோ ?
இவ்வுலகில் இருப்பேனோ ?

No comments:

Post a Comment

நர்மதா

தொலைதூர வாழ்வின் துயரங்கள் சுரைக்காயா 😔😔😔 என்றதற்கும் சுரைக்காய் 😍😍😍 என்பதற்கும் இடைப்பட்ட தூரம் 5954 KM... பட...