Monday 20 November 2023

அன்பு மொழி

சித்திரைக்கு முந்தியவள்,
நித்திரையை நிந்தியவள்,
மந்திரியாய் ஆளுபவள்,
முகத்திரையாய் மிளிர்பவள் ! 

குரல் கேட்க ஏங்குபவள்,
கான குரல் இசையாய் ஒலிப்பவள்,
இன்ப நிலா காண்பதற்கே,
தேன் மழையில் நனைப்பவள் !

மலர்ச்செண்டு போதும் என்பாள்,
மறக்காமல் வாழ்த்து கேட்பாள்,
உறங்கச்சொல்லி கதைப்பாள்,
விடியும்மட்டும் சுவைப்பாள் !

அன்பு மொழி உரைப்பாள்,
உரிமைக்கு மட்டும் சண்டையிட்டு,
உதடெல்லாம் கடிப்பாள்,
இவளன்றி நானோ ?
இவ்வுலகில் இருப்பேனோ ?

No comments:

Post a Comment

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!