Tuesday, 30 April 2024

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்?

தான் எழுதிய தேர்வுத்தாளை தானே
மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்?

நீ நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ உன்னை கவனித்த அடுத்த மனிதர்கள் தானே சொல்லவேண்டும், நீயே எப்படி சொல்லிக்கொள்கிறாய்?

சுயமதிப்பீடு எப்படி சரியாகும்? 

Saturday, 30 March 2024

துணை

துணை எது ?
வெற்றி விலகினாலும்,
உறவு உதறினாலும்,
துன்பம் துரத்தினாலும்,
வறுமை வாட்டினாலும்,
உற்ற நிழலாய் வருவது, துணிவே !
துணிவே "துணை"  ஆனால்,
துயர் ஏது ?

துவழும்போதெல்லாம்
ஊக்கம்கொடுப்பாள்,
தடுமாறும்போது,
ஊன்றுகோலாவாள்,
இடரும்போது,
தாங்கிப்பிடிப்பாள்,
துணை அவள் துணிவே !
வாழ்க்கை அலையில்,
வெற்றிக்கரை அழைத்துசெல்வாயா ?
வெற்றித்திருமகள் துணையே !

Friday, 1 March 2024

ராகுல்காந்தி

கருப்புக்குடையாய்
வெறுப்பு வெப்பத்தை
உள்வாங்கினீரோ
உன்குடைக்குள்
மக்கள் ஆசுவாசப்பட!

எல்லைச்சாமியோ
கருப்பண்ணசாமியோ
இரண்டும் நீதானய்யா
ஏழைகளுக்கு

மதமும் வெறுப்பும்
எங்களை தின்றுவிடாமல்
இருக்க எல்லையில் நின்று
பாதுகாக்கும்
கருப்பண்ணசாமி நீதான்

சமூக இருட்டை
உள்வாங்கி
ஆடையாய் அணிந்தீரோ!

ஆயினும் அது உம்மை
பாதிக்கவிடாமல்
வெள்ளை உள்ளத்தால்
பளிச்சிடும் புன்னகையால்
தற்காத்துக்கொண்டீரோ

வாழ்க நீ
வளர்க தேசம்

இனிய காலை வணக்கம்
உங்களுக்கும்!
என் நண்பர்களுக்கும்!

Wednesday, 28 February 2024

ஊடல்

பேரன்பு மழைக்கு ஏங்கும் மலரவள்
பெருவெற்றி பெருவெள்ளத்திற்கு தகிக்கும் தடாகம் நான்
சூழியல் இடர்க்கீடே கரையும் காலம்,
சில குரல் ஒலிகளும்
ஊடூடே கேளிக்கை  சித்திரஓவிங்களாய்
சில நேரம் மட்டும் அன்பு பரிவர்த்தனைகள் நடந்தேற
ஊடல்கள் சபையேறும் நேரம் இது
துயிலடையா கனவுகள் கரைசேர்க்கும் வரை

காதலிக்க நேரமில்லை

அறிவதுமில்லை,
தெரிவதுமில்லை,
புரிவதுமில்லை !
சில பயண துயரங்கள் !
முகப்பு முல்லைகளின்,
வாசங்கள் தெரிவதில்லை,
முற்றத்து கீத ஒலிகேட்பதில்லை,
சாளரத்து தென்றல் உணர்வதில்லை !
விடிவதும், பொழுது சாய்வதும்,
விழிப்பதும், துயில்வதுமாக,
வாழ்க்கை பயணங்கள் !
கண்மூடினால் இலக்குகள்,
கண்விழித்தால் கடமைகள்,
இடையே பயணங்கள்,
இதில் எனக்கும்,
எனக்கானவருக்கும் ,
நேரம் கிடைக்குமா ?

உறவை போல்,
நானும் ஏங்கி நிற்கிறேன்❤️❤️ !

Sunday, 14 January 2024

குறள் 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.  

பேச்சு : 

இனிய சொல்
தாழ்ந்த குரல்
இதயம் வெல்லும்!

பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலே புரிந்துகொள்ளாமலே முழு வாழ்க்கையை கழித்துவிடுகிறோம். நான் பேசினால் ஒரு பயல் கேட்பதில்லை என்பவர்கள் தங்கள் வார்த்தைகளை உற்று நோக்குங்கள். என் பேச்சிற்கு மரியாதை இல்லை என்பவர்கள் உங்களின் வார்த்தைகளை கவனியுங்கள்.  சுடாத வார்த்தைகளா அவை?

Wednesday, 10 January 2024

ஹைக்கு - 2

        (1)

சிதறக் 
காத்திருக்கும்
உடைந்தக்
கண்ணாடி 
துண்டுகளா
நாம்?

         (2)

படித்தால்
சுதந்திரம்
கிடைக்கும்
என நம்பாதே!

நீ அடிமை தான்

அப்பாவுக்கு
அண்ணனுக்கு
கணவனுக்கு
குழந்தைகளுக்கு

விலங்குகள்
திறக்கப்படுவதில்லை

சொந்தம்
பந்தம்
கைகளில்
உன் விலங்கின் 
சாவி!.

Monday, 8 January 2024

கோபம்

கோபங்கள் ஏனோ ?
உரிமையினாலா ?
ஊடலினாலா ?
எண்ணங்கள் சொல்லி,
விடைகளை தேடி,
ஊடலை களைவாயா ?
உரிமைகள் தொடர்வாயா ?

பருவம் தப்பிய பயிர்,
கனலில் கருகலாமா ?
கருணைமழை பொழியலாமே !❤️❤️

Sunday, 31 December 2023

புத்தாண்டு பரிசு 2024

புத்தாண்டு புதுப்பரிசு,
மலரா ? மரகதமா ?
மனையா ? மாளிகையா ?
இது எதுவும்,
மங்கை நீ யாகுமோ ?
நீயே பரிசானபோது,
விண் தாண்டி நிற்கிறேன் !
மூவுலகும் வெல்கிறேன் !

Saturday, 30 December 2023

குறள்_1142 அலரறிவுறுத்தல்


களத்துமேடு
ஆற்றங்கரை
காவியம் பேசும் 
இடமானது
கண்மணியை
காணாது கலங்கும்
மனமறியாது
தங்கள் கற்பனை
வளர்த்தனர்
முற்றத்தில் முல்லைப்பூ
ஜாடைகாட்டி வைத்தேன்
நீ எடுத்து சூடும்முன்
ஊரெல்லாம் பரவியது
தேன்மிட்டாய்
பாதி கடித்து
படல்மீது வைத்தேன்
எறும்பும் பகையாகி
எல்லோரிடமும்
காட்டி கொடுத்தது


முதிர்வு

பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால்  இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...