Saturday 30 December 2023

குறள்_1142 அலரறிவுறுத்தல்


களத்துமேடு
ஆற்றங்கரை
காவியம் பேசும் 
இடமானது
கண்மணியை
காணாது கலங்கும்
மனமறியாது
தங்கள் கற்பனை
வளர்த்தனர்
முற்றத்தில் முல்லைப்பூ
ஜாடைகாட்டி வைத்தேன்
நீ எடுத்து சூடும்முன்
ஊரெல்லாம் பரவியது
தேன்மிட்டாய்
பாதி கடித்து
படல்மீது வைத்தேன்
எறும்பும் பகையாகி
எல்லோரிடமும்
காட்டி கொடுத்தது


No comments:

Post a Comment

துணை

துணை எது ? வெற்றி விலகினாலும், உறவு உதறினாலும், துன்பம் துரத்தினாலும், வறுமை வாட்டினாலும், உற்ற நிழலாய் வருவது, துணிவே ! துணிவே "துணை&q...