Tuesday 16 November 2021

அப்பா

ஊருக்குள்ள பிரச்சினையோ

உறவுக்குள்ள மனவருத்தமோ

ஓடி வந்து தீர்த்து வைப்பார் 


ஊரெல்லாம் சுற்றி வந்த

சைக்கிளும் டீவிஎஸ் ம்

உம் அருமை மறந்திடுமா

வாழ்வெல்லாம் பயணித்த

உம்முடனே மறைந்திடுமா 


சாந்தி வந்து சேருமோ

மீந்திருப்போர் வாழ்விலே 


நிதானமும் நிம்மதியும்

சொத்து போல 

சேர்த்து வைத்தார்

சொந்தங்களை கூட

சொத்தாகவே பார்த்தார்

அமரவைத்து புத்திமதி

இன்முகத்துடன் சொன்னார்!

ஒத்தை லட்சம் கேட்டால்

இரண்டாய் தந்துவிட்டு

இன்னும் வேண்டுமா,

உம்மையன்றி யார் கேட்பார்?

பரிசும் பணமுடிப்பும்

பண்டிகையில் யார் தருவார்?

எப்ப வர்ரே எப்ப வர்ரே

நூறுமுறை யார் கேட்பார்? 


காண முடியாமலும் 

பேண முடியாமலும்

கண்ணில் நீர் தந்து

விண்ணைத் தொட சென்றவரே

விம்முவது கேட்பீரோ



இப்படிக்கு 


ஈற்றும்

பேற்றும்


No comments:

Post a Comment

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...