காய்ந்து கிடந்த என்
மன நிலத்தில் மழையாய்
பொழிந்து ஈரமேற்றிய வெண்மேகமே...
இருள்கவ்விய என்
இரவுக்குள் இன்ப வலியாய் நுழைந்து ஒளியேற்றிய பெண்ணிலவே...
சீரின்றி சிதறித்திரிந்த
என் சிந்தைக்குள்
அரவம் இன்றி சரணம்
இயற்றிய இருங்காட்டுக்குயிலே...
மாலை நேர மித வெயிலில்
குளிர் காயும் கூவிரமலரே ...
மறைந்திருந்து உனை பார்க்கும்
என் மனமதனை அறிவாயா... ❣️