Wednesday 8 March 2023

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்ணே!
பொன்னே!
உன்னை நீ அறிவாய்!

உனக்கு
போருக்கு
தலைமைதாங்கி
வெல்லும்
வலிமையுண்டு
வங்காளப்போர்
வரலாறு
படித்தாயா

எதிர்ப்பது என
முடிவானால்
எவருக்கும்
பணியாதே!
அஞ்சாமை
சொல்லுக்கு
பொருளாகவேண்டும்
அணுவை ஆராய்வோம்
ஏழ்மையை
ஒழிப்போம்

அலட்டாமல்
அசராமல்
அஞ்சாமல்
சூழ்நிலையை
புரிந்துகொண்டு
வென்றுகாட்டுவோம்
ஆண்கள்சூழ்
அரசியலில்
நமக்கென்று
தடம்பதிப்போம்

தடுப்பையும்
தாண்டுவோம்
அண்ணனுக்கும்
தம்பிக்கும்
நம்பிக்கை
தந்திடுவோம்

கஷ்டத்தில்
பங்குகொண்டு
காலமெல்லாம்
உடன் இருப்போம்

இனிய மகளிர்
தின வாழ்த்துக்கள்!

குறள்:1203

காதலர்
மோதி
தும்மல்
மூவரும் ஒன்று

ஒருவர்
நினைப்பது
போல் நடித்து
நினைக்காது
மறப்பார்

மற்றவர்
கொடுப்பது
போல் நடித்து
எடுத்துகொள்பவர்

4% அகவிலைப்படி தந்து
18% சேவை வரி பிடிப்பார்

தும்மல் வருவது
போல நடித்து
வராமல் துன்புறுத்தும்

ஆக மூவரும் 
ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்!

Sunday 5 March 2023

குறள் : 1200

இரக்கமே இல்லாத
தலைவனிடம்
சிலிண்டர் விலை
அம்பது ரூபாய்
ஏற்றியது ஏன்
என கேட்பது 
செவிடன் காதில்
ஊதிய சங்குபோல!

அப்படித்தான்
இருக்கிறது
ஆசையே இல்லாத
ஆடவனிடம்
அன்பை எதிர்பார்ப்பது
கடலை தூர்ப்பது
போல கடினமானது!

நான் என்ன
வேட்பாளரா
கைகூப்பி
வணங்கி
அன்பு ஓட்டு
கேட்டுவாங்க?

Comments :

Saturday 4 March 2023

குறள் 1199

கோபம்
என்றால்
கொட்டிவிடு

சனியனே
சொல்லும்
தித்திக்கும்

மௌனம்
மட்டும்
காக்காதே

வருத்தம்
என்றால்
சொல்லிவிடு

முகத்தை
மட்டும்
திருப்பாதே

எதிரெதிரே
சந்திக்கையில்

நலமா என்று
கேட்கவேண்டாம்

ஏறெடுத்தாகிலும்
பார்த்துவிடு

அப்பாவா
காதலா
குழப்பத்தில்
அப்பாவை
தேர்ந்தது
தவறுதான்!



Friday 3 March 2023

குறள் : 1198

பிரியும்போது
தந்த முத்தத்தின்
ஈரம் காயாமல்
தினந்தோறும்
கண்ணீரால்
நனைத்து
காத்துவருகிறேன்
தெருமுனைவரை
திரும்பி திரும்பி
பார்த்து சென்றதும்
முனையில்நின்று
கையசைத்து
சென்றதும்
கண்ணைவிட்டு
அகலாமல்
காட்சியாக நிற்கிறது
'இன்று வருகிறேன்'
என்ற இனிப்பான
செய்தி கேளாமல்
கற்சிலையாய் நான்!

Comments : 

குறள் : 1196

இன்றைய 
நீதிதேவதையின்
தராசு அதிகமாக
வலப்பக்கம்
சாய்ந்ததால்
பணத்திற்காக
பதவிக்காக
சாய்க்கப்பட்டதால்
பாரதமாதா
களையிழந்து
வாடுகிறாள்
எந்தபக்கமும்
சாயாத 
நீதி தராசு
எல்லாரும்
விரும்புவதுபோல்
சமநிலை தவறாத
இருவரும்
நேசிக்கும்
காதலே
தலைசிறந்த
காதலாகும்
ஒருதலைக்காதல்
உவகை தராது!

குறள் : 1197

சூரியன் 
பூமியின்மீது
பாதி ஒளியை
வீசி பகலாக்கி
மீதி பூமியை
இரவாக்கி
இருளை
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
அதுபோல
நிலாமகள்
மீதும் கதிரை 
வீசாமல்
அமாவாசை
ஆக்கி இருள்
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
சூரியனும்
காமனும்
ஒன்றா?

பூமி
நிலா
பெண்
இருட்டால்
பசலையால்
வதைக்கப்படுன்றனர்!

Wednesday 1 March 2023

சிலிண்டர் விலை ரூ 50 உயர்வு!


மு.க.ஸ்டாலின்

வாரிசு
என்பதால்
வாய்ப்பு
தரவில்லை

இதனை
இதனால்
இவன்முடிக்கும்
என்றாய்ந்து 
அதனை
அவன்கண் 
விட்டாரோ
கலைஞர்!

வாலிப வயதில்
இருந்து
கட்சிக்காக
உழைத்து
ஒவ்வொரு
படியாக
மேலேறி
வந்தவர்!

காதலியை
கைபிடிக்க
காத்திருக்கும்
காதலன்போல்
கோட்டையில்
கொடியேற்ற
50 வருடம்
காத்திருந்தார்

கட்சி உறுப்பினர்
சட்டமன்ற உறுப்பினர்
சென்னை மேயர்
துணைமுதல்வர்
செயல் தலைவர்
தலைவர்
முதல்வர்

இத்தனை படிகள்
ஏறியபோது
எத்தனை பொறுமை
இருந்திருக்கும்
67 வயதில்
முடிசூட்டுவிழா
அந்த பொறுமைக்கு
தலைவணங்கவேண்டும்

இவ்வளவுநாள்
பொறுமைக்கு
உதாரணமாக
பூமியை சொன்னார்கள்
இனிமேல்
பூமிக்கு பதிலாக
உங்களை
சொல்வார்கள்

அம்மா உணவகம்
மூடும்படி
வேண்டுகோள்
வந்தபோது
அதிமுக 
தொண்டனுக்கு
மட்டுமல்ல
எனக்கும் அவர்
அம்மாதான்
அவர் பெயரில்
உணவகம்
தொடரும் என்று 
சொன்னபோது
அம்மாவே
நெகிழ்ந்திருப்பார்!
பகைவருக்கும்
அருளும்
நன்னெஞ்சு உமக்கு!

இலவச பஸ்
பயணம்
எத்தனை
பெண்கள்
வாழ்வை
செழிப்படைய
செய்திருக்கும்!

உயர்கல்வி சேரும்
பெண்குழந்தைக்கு
ஆயிரம் ரூபாய்
ஊக்கத்தொகை
அவளை மகிழ்ச்சியில்
ஊஞ்சலாட
வைத்திருக்கும்! 

தலைவா 
உன் சேவைகள்
தொடரட்டும்
உன் ஆயுளும்
நீளட்டும்
நோய்நொடியின்றி
நூறாண்டுவாழ
மனதார
வாழ்த்துகிறோம்!
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!

Hindi

ஜரூர் சிக்காதூங்கீ !
Jaroor sikkadhoongi !
கண்டிப்பாகசொல்லித்தருவேன் !

1. முஜே குச் கெஹ்னீ ஹை
Muje kuch kehni hai
எனக்கு சிலது சொல்லவேண்டும்
சந்தர்ப்பம் : நீங்கள் நண்பரிடம் ஏதேனும் சொல்லவிரும்பினால்
இந்த வாக்கியம் சொல்லலாம். 

2. ஆப் குச் கெஹ்னா சாஹ்தே ஹை க்யா?
Aap kuch kehna sahthae hai kya?
நீங்கள் எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

3. ஆப் கலத்(சஹீ)போல்றே ஹை!
Aap galath(sahee) bol rae hai! 
நீங்கள் தவறாக(சரியாக)பேசுகிறீர்கள்!

4. ஆஜ் இத்னா காபி ஹை!
Aaj ethna cofi hai!
இன்று இவ்வளவு போதும்!


சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...