கண்கள்
உறுதி செய்த
காதலை
வாய்மொழியில்
கொண்டுவர
தெரியாமல்
சம்பந்தமில்லாத
வார்த்தைகள்
கொண்டு
தொடங்கிய பேச்சு
'காபி வித் இந்துவா'
இன்றும் காலையில்
சொல்லி பார்க்கிறேன்
நீயும் பேச தெரியாமல்
கடைக்குபோறேன்
ஏதேனும் வேண்டுமா
கேட்டு முழித்தாய்
ஷாம்பு வாங்கிவா
சொன்னதும்
அதோடு சேர்த்து
டெய்ரி மில்க்கும்
வாங்கிவந்தாய்
எனை கேலிசெய்த
ஒருவனை கேள்விகேட்க
படைதிரட்டி சென்று
பயமுறுத்தி வந்தாய்
இப்படி எண்ணற்ற
இனியநினைவுகளால்
என் இன்றைய
வாழ்க்கை ஓடுகிறது
நீ இல்லைஎன்றாலும்
உன்நினைவுகள்
காற்றாகி நீராகி
எனை உயிர்ப்பித்து
கொண்டிருக்கின்றன
உன் வருகைக்காக
எனை காக்கவைக்கின்றன!
Saturday, 11 March 2023
குறள் :1206
Labels:
குறள் கவிதைகள்

Friday, 10 March 2023
குறள் 1204
(சமையலறையில் நான். ஜன்னலில் பழுப்பி. காலை 7மணி)
பழுப்பி : மீமீ.... மியாவ்வ்.. யாயா?
நான் : பாலூற்றும் மாமா ஊருக்கு போயிட்டார்
பழுப்பி : யாவ்மி... மமியாவ்..மிவ்யாயா?
நான்: எப்ப வருவார்னு சொல்லலைடி
பழுப்பி: மியாவ்..மியாவ்மியாவ். மிவ்வ்மி
நான்: என்னையே நினைச்சுக்குவாரா தெரியலை. இதுல உன் ஞாபகம் வருமானு வேற கேக்குறே. ஆசைதான்டி உனக்கு!
பழுப்பி: மியாவ்மி மிமிமி யாவ்மி மிவ்
நான்: ஏன் நான் பால் ஊற்றினா ரதிக்கு தொண்டைல இறங்காதா? அவரேதான் ஊத்தணுமா?
பழுப்பி: யாவ்மி வயாவ்மி மியாவ்!
நான்: சரி சரி புலம்பாதே பால் கொண்டு வரேன்.
Compliments :
பழுப்பி : மீமீ.... மியாவ்வ்.. யாயா?
நான் : பாலூற்றும் மாமா ஊருக்கு போயிட்டார்
பழுப்பி : யாவ்மி... மமியாவ்..மிவ்யாயா?
நான்: எப்ப வருவார்னு சொல்லலைடி
பழுப்பி: மியாவ்..மியாவ்மியாவ். மிவ்வ்மி
நான்: என்னையே நினைச்சுக்குவாரா தெரியலை. இதுல உன் ஞாபகம் வருமானு வேற கேக்குறே. ஆசைதான்டி உனக்கு!
பழுப்பி: மியாவ்மி மிமிமி யாவ்மி மிவ்
நான்: ஏன் நான் பால் ஊற்றினா ரதிக்கு தொண்டைல இறங்காதா? அவரேதான் ஊத்தணுமா?
பழுப்பி: யாவ்மி வயாவ்மி மியாவ்!
நான்: சரி சரி புலம்பாதே பால் கொண்டு வரேன்.
Compliments :
Labels:
குறள் கவிதைகள்

Wednesday, 8 March 2023
குறள் : 1201
காக்கைச் சிறகினிலே நந்தலாலா அவள் கருங்கூந்தல் தோன்றுதடா நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா அவள்
பச்சைநரம்புகள் தோன்றுதடா நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா அவள்
குரலே இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா அவளை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
Labels:
குறள் கவிதைகள்

குறள் :1202
நீளும் நேரங்கள்
நினைவுகளால்
நிறைகிறது
கடக்கும் பாதைகள்
கடந்த பாதங்களை
கைகோர்த்து நடந்த
நிமிடங்களை
ஞாபகப்படுத்துகிறது
தொலைவில் கேட்கும்
ராகங்கள் எனக்காக
நீ பாடிய வரிகளை
நினைக்க வைக்கிறது
உடல் பிரிந்தால் என்ன
உள்ளம் சேர்ந்தால்
போதாதா?
நினைவாலே
சிலைசெய்து
நித்தம் உனை
பூஜிக்கிறேன்!
compliments :
Labels:
குறள் கவிதைகள்

மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண்ணே!
பொன்னே!
உன்னை நீ அறிவாய்!
உனக்கு
போருக்கு
தலைமைதாங்கி
வெல்லும்
வலிமையுண்டு
வங்காளப்போர்
வரலாறு
படித்தாயா
எதிர்ப்பது என
முடிவானால்
எவருக்கும்
பணியாதே!
அஞ்சாமை
சொல்லுக்கு
பொருளாகவேண்டும்
அணுவை ஆராய்வோம்
ஏழ்மையை
ஒழிப்போம்
அலட்டாமல்
அசராமல்
அஞ்சாமல்
சூழ்நிலையை
புரிந்துகொண்டு
வென்றுகாட்டுவோம்
ஆண்கள்சூழ்
அரசியலில்
நமக்கென்று
தடம்பதிப்போம்
தடுப்பையும்
தாண்டுவோம்
அண்ணனுக்கும்
தம்பிக்கும்
நம்பிக்கை
தந்திடுவோம்
கஷ்டத்தில்
பங்குகொண்டு
காலமெல்லாம்
உடன் இருப்போம்
இனிய மகளிர்
தின வாழ்த்துக்கள்!
பொன்னே!
உன்னை நீ அறிவாய்!
உனக்கு
போருக்கு
தலைமைதாங்கி
வெல்லும்
வலிமையுண்டு
வங்காளப்போர்
வரலாறு
படித்தாயா
எதிர்ப்பது என
முடிவானால்
எவருக்கும்
பணியாதே!
அஞ்சாமை
சொல்லுக்கு
பொருளாகவேண்டும்
அணுவை ஆராய்வோம்
ஏழ்மையை
ஒழிப்போம்
அலட்டாமல்
அசராமல்
அஞ்சாமல்
சூழ்நிலையை
புரிந்துகொண்டு
வென்றுகாட்டுவோம்
ஆண்கள்சூழ்
அரசியலில்
நமக்கென்று
தடம்பதிப்போம்
தடுப்பையும்
தாண்டுவோம்
அண்ணனுக்கும்
தம்பிக்கும்
நம்பிக்கை
தந்திடுவோம்
கஷ்டத்தில்
பங்குகொண்டு
காலமெல்லாம்
உடன் இருப்போம்
இனிய மகளிர்
தின வாழ்த்துக்கள்!

குறள்:1203
காதலர்
மோதி
தும்மல்
மூவரும் ஒன்று
ஒருவர்
நினைப்பது
போல் நடித்து
நினைக்காது
மறப்பார்
மற்றவர்
கொடுப்பது
போல் நடித்து
எடுத்துகொள்பவர்
4% அகவிலைப்படி தந்து
18% சேவை வரி பிடிப்பார்
தும்மல் வருவது
போல நடித்து
வராமல் துன்புறுத்தும்
ஆக மூவரும்
ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்!
Labels:
குறள் கவிதைகள்

Sunday, 5 March 2023
குறள் : 1200
இரக்கமே இல்லாத
தலைவனிடம்
சிலிண்டர் விலை
அம்பது ரூபாய்
ஏற்றியது ஏன்
என கேட்பது
செவிடன் காதில்
ஊதிய சங்குபோல!
அப்படித்தான்
இருக்கிறது
ஆசையே இல்லாத
ஆடவனிடம்
அன்பை எதிர்பார்ப்பது
கடலை தூர்ப்பது
போல கடினமானது!
நான் என்ன
வேட்பாளரா
கைகூப்பி
வணங்கி
அன்பு ஓட்டு
கேட்டுவாங்க?
Comments :
Labels:
குறள் கவிதைகள்

Saturday, 4 March 2023
குறள் 1199
கோபம்
என்றால்
கொட்டிவிடு
சனியனே
சொல்லும்
தித்திக்கும்
மௌனம்
மட்டும்
காக்காதே
வருத்தம்
என்றால்
சொல்லிவிடு
முகத்தை
மட்டும்
திருப்பாதே
எதிரெதிரே
சந்திக்கையில்
நலமா என்று
கேட்கவேண்டாம்
ஏறெடுத்தாகிலும்
பார்த்துவிடு
அப்பாவா
காதலா
குழப்பத்தில்
அப்பாவை
தேர்ந்தது
தவறுதான்!
Labels:
குறள் கவிதைகள்

Friday, 3 March 2023
குறள் : 1198
பிரியும்போது
தந்த முத்தத்தின்
ஈரம் காயாமல்
தினந்தோறும்
கண்ணீரால்
நனைத்து
காத்துவருகிறேன்
தெருமுனைவரை
திரும்பி திரும்பி
பார்த்து சென்றதும்
முனையில்நின்று
கையசைத்து
சென்றதும்
கண்ணைவிட்டு
அகலாமல்
காட்சியாக நிற்கிறது
'இன்று வருகிறேன்'
என்ற இனிப்பான
செய்தி கேளாமல்
கற்சிலையாய் நான்!
Comments :
Labels:
குறள் கவிதைகள்

குறள் : 1196
இன்றைய
நீதிதேவதையின்
தராசு அதிகமாக
வலப்பக்கம்
சாய்ந்ததால்
பணத்திற்காக
பதவிக்காக
சாய்க்கப்பட்டதால்
பாரதமாதா
களையிழந்து
வாடுகிறாள்
எந்தபக்கமும்
சாயாத
நீதி தராசு
எல்லாரும்
விரும்புவதுபோல்
சமநிலை தவறாத
இருவரும்
நேசிக்கும்
காதலே
தலைசிறந்த
காதலாகும்
ஒருதலைக்காதல்
உவகை தராது!
Labels:
குறள் கவிதைகள்

Subscribe to:
Posts (Atom)
குறள் 1271
உள்ளக் கிடக்கையை உதடுகள் மறைக்கலாம் கண் மறைக்குமோ? இலை மறைக்கும் கனியை வாசம் காட்டிக் கொடுப்பது போல என்மீது கொண்ட நேசத்தை உன் கண்கள் என்னி...
-
Lines and Material conventions 1. Demonstration of various lines and material conventions 2. Sheet no 1. Draw the conventions of lines and...
-
What is Engineering Drawing? In engineering drawing, engineering-related objects like buildings, walls, electrical fittings, pipes, machin...
-
Orthographic Projection exercises Draw front view, top view ,side view of the following exercises Problem 1 Problem 2 ...
-
Technical Lettering Syllabus: 1. Introduction to lettering and its necessity. Demonstrate the construction details of Engli...