Sunday, 3 September 2023
ஒரு தேசம் ஒரே தேர்தல்
ஒரு தேசம், ஒரே தேர்தல்
கட்சிகளின் செலவைக் குறைக்க
அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா? செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் எல்லா பாராளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்த வேண்டுமென்பது பலவீனமான வாதம். தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2019இல் எழுதிய கட்டுரை.
எதிர்பார்த்தது போலவே மோடி 2.0 அரசு வேகவேகமாகத் தன் ஏமாற்றுக் குணத்தின் இரண்டு முகங்களையும் வெளிக்காட்டியிருக்கிறது. மோடி 1.0 போலவே இப்போதும் பிரதமர் ஆற்றிய பிரம்மாண்ட உரையைத் தொடர்ந்து பாஜக அல்லாத பிற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் பதவியேற்பு இடையூறு செய்யப்பட்டது, முத்தலாக் மசோதா முன்வைக்கப்பட்டது, விசாரணையிலிருக்கும் தெலுங்கு தேசம் கட்சி ராஜ்ய சபா எம்பிக்கள் பாஜகவில் சேர்வது அறிவிக்கப்பட்டது. இவையெல்லாவற்றையும் விட அவர்களின் ஏமாற்று முகத்தை வெளிக்காட்டுவது 'ஒரு தேசம், ஒரே தேர்தல்' வேண்டும் என்ற பேச்சு.
பதவியேற்பில் மிக மோசமாக, வருந்திச் சிரிக்கும்படி
மதச்சார்பின்மையும் நடைமுறைகளும் மீறப்பட்டன. முத்தலாக் மசோதாவின் குற்றப் பிரிவுகள் அரசியலமைப்பில் உள்ள சமத்துவத்தை அப்பட்டமாக மீறுகின்றன. இவை போலவே, 'ஒரு தேசம், ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது - அரசியலமைப்பில் உள்ள 'மாநிலங்களின் ஒன்றியம்' என்ற கூட்டாட்சி அடிப்படை அமைப்பை வெளிப்படையாக மீறும் செயல். இடை ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டிவிட்டார்கள். இப்போது வெவ்வேறு கால அளவுகள் கொண்ட ஆட்சிகளுக்கு ஒரே ஐந்தாண்டு அளவை நிர்ணயிக்க முடியாது என்பதற்கான அமைப்புரீதியான, சட்ட வரம்புகளையும் சொல்லியிருக்கிறார்கள். (உதாரணத்திற்கு, முதல் 'ஒரே தேர்தலை' நடத்துவதற்காக அரசியலமைப்பின் எல்லைக்குட்பட்டு ஒரு மாநில அரசின் ஆட்சியை எப்படி நீட்டிப்பது அல்லது குறைப்பது?) ஒரு அரசு தேர்தலுக்கு முன்னே பெரும்பான்மை இழக்கும்போது என்ன செய்வது? (ஐந்தாண்டுகளில் மிச்சம் இருக்கும் காலத்துக்கு ஒரு அரசைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தி செலவை இரட்டிப்பாக்குவதா; பெரும்பான்மை இல்லாமல், எந்த மசோதாக்களையும் நிறைவேற்ற முடியாமல் இருக்கும் அரசையே மீத காலமும் ஆட்சி செய்யச் சொல்வதா?)
செலவைக் குறைப்பதென்ற வாதம் பலவீனமானது
இப்படியொரு விசயம் செய்தால் செலவு குறையுமா என்று பார்த்தால், சில உண்மைகளை ஆராய்ந்தாலே இல்லையென்று சொல்லிவிடலாம். மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடத்தும் செலவுகள் ஒரு உறுப்பினருக்கு
1 கோடியிலிருந்து (சமீபத்திய கர்நாடகத் தேர்தல்கள் படி) ஐந்தாண்டுகளுக்கு எல்லா மாநிலங்களும் சேர்ந்து 4,150 கோடி முதல் மொத்தமாக 5,500 கோடிவரை ஆகிறது. அரசியலமைப்புப் படியான ஜனநாயகத்தில் வாக்காளரின் உரிமைகளை நிறைவேற்ற இது நிறைய பணம் என்று சொன்னாலும் கூட, ஐந்தாண்டுகளில் மாநிலங்களின் மொத்த பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை.
தமிழ்நாட்டையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.234 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எனும்போது, ஒவ்வொரு ஐந்தாண்டும் தேர்தல் நடத்த அதிகபட்சம் 250 கோடி செலவு எனலாம். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த முக்கியத் தேவையான இந்தச் செலவை:
தேர்ந்தெடுக்கப்படும் அரசின் ஐந்தாண்டு ஆட்சிக்கான மொத்த பட்ஜெட்டோடு ஒப்பிடலாம். இந்த 15அவது சட்டப்பேரவைக்கு அது குறைந்தது 13 லட்சம் கோடியாக இருக்குமென மதிப்பிடுகிறேன்.
அல்லது
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் தொகுதி மேம்பாட்டு நிதியான 2.50 கோடி, மொத்தமாக 2,925 கோடி (பட்ஜெட்டில் 0.23 சதவீதம்) உடன் ஒப்பிடலாம்.
அதாவது ஒரு சட்டப்பேரவையை தேர்ந்தெடுக்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை செலவிடப்படும் பணம், அந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்புப் படி முடிவுசெய்யும் மாநில பட்ஜெட்டில் 0.02 சதவீதம்தான், அதே ஐந்தாண்டுகளில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் 8 சதவீதம்தான். நியாயமாகப் புரிந்து கொள்ளும் பலருக்கும் இந்தச் செலவுக் குறைப்பு விவாதம் இத்தோடு முடிந்துவிடும்.
இருந்தாலும், செலவுக் குறைப்பு குறைத்துப் பேசும்போது, மாநில, ஒன்றிய அரசுகள் எக்கச்சக்க பணத்தை கேள்விக்குரிய விசயங்களில் செலவு செய்வதையும் கவனிக்க வேண்டும் (சிலைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள், விளம்பரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகள்). அதே நேரம், திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் திட்டமிடப்பட்ட நிதியில் நிறைய செலவுசெய்யப்படாமல் விடப்படுகிறது. (2016 சிஏஜி அறிக்கையில் கடந்த 20 ஆண்டுகளில் 1,30,000 கோடி செஸ் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)
தேர்தல் நடைமுறையின் செலவுகளைப் பிரித்துப் பார்த்தபிறகும், ஒரே தேர்தல் நடத்துவதால் எந்தக் குறிப்பிடத்தக்க சேமிப்பும் நிகழும் என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையம் மிக மிகச் சில முழுநேர ஊழியர்களைக் கொண்ட ஒரு அமைப்பு, பெரும்பாலும் பதவிசார்ந்த அலுவலர்கள் (உதாரணத்திற்கு ஒரு மாவட்டத்தின் ஆட்சியர்தான் அதன் தேர்தல் அலுவலரும்), நியமிக்கப்பட்ட ஊழியர்கள் (உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்களிப்பு போன்றவற்றில் கூடுதல் வேலைகள் கொடுக்கப்படும்). ஒரே நாளில் இரண்டு மடங்கு மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பெற்று, கையாள்வதன் செலவை, இரண்டு வெவ்வேறு நாட்களில் பாதிப் பாதி இயந்திரங்களைக் கையாள்வதன் செலவோடு ஒப்பிட்டால் அவ்வளவு குறைவாக இருக்காது. சொல்லப்போனால் தனித்தனியாகச் செய்வதே நம்பகத்தன்மையோடு, சிறப்பாக செயல்பட வழிவகுக்கும். களத் தேர்தல் நடைமுறைகளின் அடிப்படையான மற்றும் மாறும் செலவுகளை ஒப்பிட்டால், ஒரே தேர்தலால் செலவு குறைவதற்கான வாய்ப்பு தெரியவில்லை.
தேர்தல்களுக்கு இன்னும் அதிகம் செலவு செய்ய வேண்டும்
ஒரு தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தால் அரசு/பொது நிதிகள், வளங்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்றால், அரசியல் கட்சிகளின் செலவு? தேர்தல்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் அரசியல் கட்சிகளின் செலவு நிச்சயம் குறையும். ஆனால் அரசியல் கட்சிகளின் செலவைக் குறைக்க நமது அரசியலமைப்பின் அடிப்படையையே அழிக்க வேண்டுமா? நோயாளியைக் குணமாக்க மருத்துவரைக் கட்டிப்போடுவது போலிருக்கிறது இது.
தேர்தலில் போட்டியிட்ட அனுபவத்திலிருந்தும், கட்சியில் வேறுபல விசயங்களுக்கிடையே தரவுகளிலும் நடைமுறைகளிலும் கவனம் செலுத்திய அணியின் தலைவராகவும், நான் உண்மையான ஜனநாயக நடைமுறைகளை உறுதிப்படுத்த தேர்தல்களில் குறைவாக அல்ல, இன்னும் நிறைய செலவழிக்க வேண்டும் என்று சொல்வேன்.
வாக்காளர் பட்டியல்களில் சேர்ப்பு, விடுவிப்பில் பல ஓட்டைகள் தொடங்கி அடிப்படை நடைமுறைகளிலேயே பெரிய பிழைகள் இருக்கின்றன. வாக்காளர்களை வயதுவாரியாகப் பிரித்து ஒரு வரைபடத்தில் குறித்தாலே (இந்தியா போன்ற வளரும் நாட்டில் அது (இடது புறம்) இளையவர்களிடமிருந்து (வலது) வயதானவர்கள் பக்கம் சரிய வேண்டும்) 18- 25 வயதுள்ள இளம் வாக்காளர்கள் முழுமையாக சேர்க்கப்படாதது (விடுபட்டுள்ளது) தெரியும். போலி சேர்ப்புக்கு நமது 2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தலைப் பார்த்தாலே போதும், இந்த ஒரு சட்டப்பேரவை தொகுதியில் இருந்தே மாநில தேர்தல் ஆணையம், ஏப்ரல் 2017இல் இடைத்தேர்தல் திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்டது தொடங்கி டிசம்பர் 2017க்குள், 47,000 பதிவுகளை நீக்கியிருக்கிறது.
இந்த நீக்கங்களுக்குப் பின் வாக்காளர் பட்டியல்களை ஆராய்ந்து பார்த்தபோது இன்னும் பல நூறு போலி/தெளிபதிவுகளைக் கண்டோம் -அவற்றைச் சரிசெய்ய தலைமை தேர்தல் ஆணையரிடம் எடுத்துச் சென்றோம். அவற்றில் அதிர்ச்சிகரமான ஒன்று, ஒரு வாக்காளர் அடையாள அட்டை ஐந்து வெவ்வேறு சாவடிகளில் ஆறு முறை பட்டியலிடப்பட்டு இருந்தது, ஐந்தில் 26 வயதுள்ள இந்துப் பெண் பெயர் ஒன்றிலும், ஒரு சாவடியில் மட்டும் அதே வாக்காளர் 43 வயதுள்ள முஸ்லீம் ஆணாகவும் பட்டியலிடப்பட்டு இருந்தார்.
தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகளில் அனுபவமுள்ள எவரும் இன்னும் பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்ட முடியும். தேர்தல் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்படும் அரசு ஊழியர்கள், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் பெரும்பாலானோர் தேர்தல் நடைமுறைகளில் முழுமையான பயிற்சி பெறுவதில்லை. விசமத்தனமான செயல்களை விடுங்கள், எதிர்பாரா
செயல்பாடுகளை (பாதி நாளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாவது) கையாளக்கூட முழுமையாக பயிற்சி பெறுவதில்லை. பெரும்பாலும் வாக்குச்சாவடி அதிகாரிகளும் போட்டியாளர்களின் பிரதிநிதிகளும் 17சி படிவங்களை (வாக்களிப்பு முடிந்தபின் மொத்தம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அறிவிப்பு) காலையிலேயே விவரங்கள் நிரப்பாமலேயே கையெழுத்து போட்டுவிடுகிறார்கள் என்பதை அறிந்தோம்.
தேர்தலின் வெவ்வேறு நிலைகளில் தேர்தல் ஆணையம் அதன் படிவங்களில் பட்டியல்களில் அறிவிக்கும் தரவுகள் நிறைய தொடர்பற்றிருக்கின்றன. சமீபத்திய பொதுத் தேர்தலில் நூற்றுக்கணக்கான இடங்களில் 17சி காகிதப் படிவங்களில் உள்ள மொத்த வாக்கு எண்ணிக்கைக்கும் ஆணையத்தின் திரட்டறிக்கைக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்ததைக் கண்டோம். பெரும்பாலான இடங்களில் இது சில வாக்குகள் கூடுதல் குறைவுதான். ஆனால் சில இடங்களில் இது நூற்றுக்கணக்கான வாக்குகள். நல்லவேளை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கு எண்ணிக்கைக்கு முன் பல பெரிய வேறுபாடுகளைச் சரிசெய்தார் - பெரும்பாலானவை அலுவலர் நிலை/தட்டச்சுப் பிழைகள் என திரும்பப் பெறப்பட்டன.
இருப்பதிலேயே மோசம், ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு தொகுதியிலும், ஆணையத்தின் சாவடி வாரி வாக்கு எண்ணிக்கைக் கணக்குக்கும் (17சி படிவங்கள்), சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை நாளில் எண்ணப்படும் வாக்குகளுக்கும் (20 படிவங்கள்) உள்ள பெரிய வித்தியாசங்கள். இங்கும் இரண்டு வகை தவறுகளும் நடக்கின்றன: சில இடங்களில் போடப்பட்டதை விட நிறைய வாக்குகள் எண்ணப்படுவது, சில இடங்களில் எண்ணப்பட்டதை விட நிறைய வாக்குகள் போடப்பட்டுள்ளது.
நான் இந்தத் தவறுகளில் (இதுவரை) எந்தச் சதித்திட்டமும் இருப்பதாக குற்றஞ்சாட்டவில்லை, இவை எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் அற்புதமாக “தற்காலிக" முத்திரை ஒன்றைக் குத்தி விளக்கிவிடுகிறது. ஆனால் இத்தகைய முரண்பாடுகள் வாக்குச் சாவடி போன்ற அடிப்படை, சிறிய நிலைகளில் எண் ணிக்கைகளில் திரும்பத் திரும்ப நிகழும்போது, ஒரு நடைமுறையின் பல்வேறு நிலைகளில் நிகழும்போது, அந்த நடைமுறையை நிறைய முன்னேற்ற வேண்டியிருக்கிறது என்று தெரிகிறது. இன்னும் நிறைய ஆட்களையும் பிற வளங்களையும் முதலீடு செய்யாமல், இத்தகைய முன்னேற்றத்தை நம்மால் அடைய முடியாது.
நாம் தேர்தல்களுக்கு குறைவாக இல்ல, இன்னும் நிறைய செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தின் இந்த மிக மகத்தான புனிதமான செயல்பாடு அதிகபட்ச நேர்மையோடு, நம்பகத்தன்மையோடு, வெளிப்படையாக நடப்பதை உறுதிசெய்ய முடியும்.
(Author note Dr. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர். இக்கட்டுரை எழுதப்பட்ட போது தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவின் உறுப்பினராகவும், திமுக ஐடி அணியின் தலைவராகவும் இருந்தவர்)
Labels:
அரசியல் கட்டுரை

Sunday, 9 July 2023
குறள் 1307
விடுப்பில் வருகிறேன் என்ற
ராணுவ வீரனின் கடிதம்
மனைவியை மகிழ்ச்சி ஆக்கும்
அடுத்த நொடியில் மறையும் அவளது மகிழ்ச்சி
இரண்டு வாரங்களே
இருப்பார் என்ற செய்தி
இன்னும் அவளை துன்பப்படுத்தும்
அதுபோலவே ஊடலால்
பிரிந்த தலைவிக்கு
அடுத்துவரும் இன்பம்
நீடிக்காமல் போகுமோ என
எண்ணி வருந்துவாள்
Labels:
குறள் கவிதைகள்

குறள் 1308
நீலக்குறி பெறாத
இதயம் பெறாத
குறுஞ்செய்திகள்
சொன்னது உன்
அன்பின் அளவை
சுடுசொல்லில்
சாம்பலானேன்
நீ இதை அறியாய்
இருந்தும் நான்
வருந்துவதேன்?
உன் புன்னகை
என் ஆக்சிஜன்
தெரிந்தும் ஏன்
கஞ்சனாகினாய்?
உன்வாசலில்
நான் வறியவளாய்
எவ்வளவுநாள்
காத்திருப்பது?
வருந்(த்)துவதை அறியாயோ
Labels:
குறள் கவிதைகள்

Wednesday, 5 July 2023
குறள் 1304
ஊடல்களும் பிணக்குகளும்
ஏராளம் இங்கே
விளையாட்டு வீரர்கள்
வீதிவந்து பிணங்கினர்
விலைவாசி உயர்வுகண்டு
மக்கள் வீதிகளில்
பிணங்கினர்
இவர்களை உணராமல்
இவர்தம் ஊடல் களையாமல்
ஊர்சுற்றும் தலைவனே
நீ வெந்நீரை ஊற்றி
ஜனநாயக வேரை அறுக்கிறாய்
மணிப்பூர் மகளாக
மருகி உருகி சாகிறேன்
பிணக்கம் களைய வருவாயோ
இல்லை பிணங்கள் எண்ண வருவாயோ
அறியாத பிள்ளையாய்
அழுது கொண்டே கேட்கிறேன்
விரைந்து வா தலைவனே
என்னை வெறுப்பு தீ
விழுங்கும் முன்னே
உன் பாராமுகம்தானே
எனை அதிகமாக சுடுகிறது
வந்தே பாரத்தைவிட
நீ வராத பாரம் சுமக்கிறேன்
அமைதி கொள் ஆருயிரே என
ஒரு வார்த்தை சொல்லாயோ
Labels:
குறள் கவிதைகள்

Tuesday, 4 July 2023
குறள் 1302
பார்வைகள் வேறாக
கருத்துக்கள் முரண்பட
மூக்குக்கு மேல் கோபம்
இருவருக்கும்
இரண்டுநாள் மௌனமொழி
மூன்றாம்நாள் மாலையில்
காபியோடு பக்கோடா
டேபிள்மீது அவள் வைக்க
பிஸ்தா குல்பியை
லேப்டாப் மீது அவன் வைக்க
அத்தோடு முடிந்தது
அவர்களுக்கான ஊடல்
அளந்து போட்ட உப்பாக!
அரசியல் வேண்டாம்
அவன் சொல்ல
அதெல்லாம் முடியாது
இவள் சொல்ல
வாய்மொழி சூட்டின்
செல்சியஸ் குறைய
நான்குநாட்கள்
ஐந்தாம்நாள் வீட்டுக்கு
நண்பர் குடும்பம் வந்து நிற்க
சிக்கன் வாங்கி வரவா
மீன்வாங்கி வரவா
என்பதோடு ஊடல் முடிந்தது
அளவாக பெய்யும் மழை
அளவாக சுடும் சூரியன்
அளவாக குளிரும் நிலா
அளவான ஊடல் கலை
அத்தனையும் அழகு
அளவுக்குள் அடங்கிநின்றால்!
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு!
மூக்குக்கு மேல் கோபம்
இருவருக்கும்
இரண்டுநாள் மௌனமொழி
மூன்றாம்நாள் மாலையில்
காபியோடு பக்கோடா
டேபிள்மீது அவள் வைக்க
பிஸ்தா குல்பியை
லேப்டாப் மீது அவன் வைக்க
அத்தோடு முடிந்தது
அவர்களுக்கான ஊடல்
அளந்து போட்ட உப்பாக!
அரசியல் வேண்டாம்
அவன் சொல்ல
அதெல்லாம் முடியாது
இவள் சொல்ல
வாய்மொழி சூட்டின்
செல்சியஸ் குறைய
நான்குநாட்கள்
ஐந்தாம்நாள் வீட்டுக்கு
நண்பர் குடும்பம் வந்து நிற்க
சிக்கன் வாங்கி வரவா
மீன்வாங்கி வரவா
என்பதோடு ஊடல் முடிந்தது
அளவாக பெய்யும் மழை
அளவாக சுடும் சூரியன்
அளவாக குளிரும் நிலா
அளவான ஊடல் கலை
அத்தனையும் அழகு
அளவுக்குள் அடங்கிநின்றால்!
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு!
Labels:
குறள் கவிதைகள்

குறள் 1303
உரசிய தீக்குச்சி
உடனே அணைகிறது
ஏற்றிய தீபம்
எண்ணை தீர அணைகிறது
எண்ணத்தில் ஏற்பட்ட தீயும்
காயம் வரும் முன்
அணைந்திடவேண்டும்.
இல்லாது போனால்
எதுவும் இருக்காது
ஏக்நாத்தும் அஜீத்தும்
எடுத்துகாட்டு அல்லவா
தவறு யார்மீது
ஆராய்ச்சி கூடாது
ஒருவர் தோற்றால்
இருவரும் ஜெயிக்கலாம்
ஒருவர் ஜெயித்தால்
இருவரும் தோற்பார்கள்
அணைத்துவிடுங்கள்
தீயை அவளை அவனை
உடனே அணைகிறது
ஏற்றிய தீபம்
எண்ணை தீர அணைகிறது
எண்ணத்தில் ஏற்பட்ட தீயும்
காயம் வரும் முன்
அணைந்திடவேண்டும்.
இல்லாது போனால்
எதுவும் இருக்காது
ஏக்நாத்தும் அஜீத்தும்
எடுத்துகாட்டு அல்லவா
தவறு யார்மீது
ஆராய்ச்சி கூடாது
ஒருவர் தோற்றால்
இருவரும் ஜெயிக்கலாம்
ஒருவர் ஜெயித்தால்
இருவரும் தோற்பார்கள்
அணைத்துவிடுங்கள்
தீயை அவளை அவனை
அவர்களை
இல்லையேல்
எரிந்து சாம்பலாகும்
உறவும் உள்ளமும்....
இல்லையேல்
எரிந்து சாம்பலாகும்
உறவும் உள்ளமும்....
Labels:
குறள் கவிதைகள்

Saturday, 3 June 2023
குறள் : 1290
எவ்வளவு தான் தாகமோ
எத்தனை நாள் காத்திருப்போ
எதிர்பாராத நேரத்தில்
இத்தனை முத்தம் தகுமோ
முத்தங்கள் யாவும்
ரத்த சிவப்பில் தந்தாளே
இழுத்து அணைத்ததில்
எலும்புகள் பலநூறாய் சிதற
தணித்துகொண்டாள்
தன் தாகம் முழுதும்
பேராசைக்காரி அந்த
மரணதேவதை!
சண்டாளி பார்வையில்
அன்பே இல்லையே!
Labels:
குறள் கவிதைகள்

Saturday, 27 May 2023
குறள் 1283
வேலை இருக்கிறது என்று
பொழுதெல்லாம் சொல்லி
எனை புறக்கணிக்கிறான்
என் நலனில் அக்கறை
குறைவாகவே வைக்கிறான்
ஆனாலும் அவன் மீதுள்ள அன்பு
நொடிக்கொருமுறை அவன்முகம் தேடி அலைகிறது.
இந்த கண்களுக்கு கொஞ்சமும்
நாணமில்லை.
மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மூளை சொல்லும்
அறிவுரையை கேளாது
அவன் வரும் வழிபார்த்து
தவமாய் தவம் கிடக்கிறது.
உப்பில்லாத கண்களோ
ரோசமே வருவதில்லை!
தவிக்கவிட்டு போனாலும்
வந்தவுடன் கண்டவுடன்
அவன் சிரிக்கும் ஒற்றை
புன்னகையில்
அவன் தந்த அத்தனை
துன்பமும் மறந்து அவனை நோக்கி ஓடுகிறது
வெட்கமற்ற கண்கள்!
Labels:
குறள் கவிதைகள்

Thursday, 6 April 2023
குறள்: 1231
மேஜை எதிரே
ஆப்தமாலஜிஸ்ட்
கண்ணில் என்ன
பிரச்சினை கேட்டார்
முன்முற்ற புல்வெளி
கறுப்பாக தெரிகிறது
இடையிடையே சில
வெண்புல்லும்
தெரிகிறது என்றேன்
உங்கள் கண்களின்
கண்ணாடி சென்னையில்
இருக்கிறது
இன்டிகோவில்
வரவழைக்கிறேன்
சிரித்தபடி சொன்னார்
தோட்டத்து குண்டுமல்லியில்
கறுப்பு பாவையை
காணவில்லை என
காவலாளியை அழைத்து
என்ன காவல் செய்கிறாய்
மல்லியில் உள்ள பாவையை
யாரோ திருடி சென்றுவிட்டனர்
திட்டியதை வாங்கிக்கொண்டு
திருதிருவென முழித்தார்
கண்களில் தானே உண்டு
இவரென்ன மல்லியில்
தேடுகிறார் நினைத்தபடி
சரிம்மா இனிமேல்
ஒழுங்காக காவல்
செய்கிறேன் என
சொன்னபடி நகர்ந்தார்
ஃபுரூட் சாலட் செய்ய
கையில் ஆப்பிளை
எடுத்த கங்காவை
பார்த்துதோலை உரி
ரத்தம் வரப்போகிறது
என்று கத்தினேன்
அவளோ கன்னத்தையா
உரிக்கிறேன்
பழத்தை உரிக்க
ஏன் பதற்றப்படுகிறேன்
என கேட்டாள்
அவளிடம் சொல்லவில்லை
அது அவரின் கன்னம்
போல தெரிவதை!
என் கண்களுக்கு
என்னதான் ஆயிற்று
எதுவும் சரிவர
தெரியவில்லையே
யாரிடம் சொல்வது
எவரை கேட்பது?
ஆப்தமாலஜிஸ்ட்
கண்ணில் என்ன
பிரச்சினை கேட்டார்
முன்முற்ற புல்வெளி
கறுப்பாக தெரிகிறது
இடையிடையே சில
வெண்புல்லும்
தெரிகிறது என்றேன்
உங்கள் கண்களின்
கண்ணாடி சென்னையில்
இருக்கிறது
இன்டிகோவில்
வரவழைக்கிறேன்
சிரித்தபடி சொன்னார்
தோட்டத்து குண்டுமல்லியில்
கறுப்பு பாவையை
காணவில்லை என
காவலாளியை அழைத்து
என்ன காவல் செய்கிறாய்
மல்லியில் உள்ள பாவையை
யாரோ திருடி சென்றுவிட்டனர்
திட்டியதை வாங்கிக்கொண்டு
திருதிருவென முழித்தார்
கண்களில் தானே உண்டு
இவரென்ன மல்லியில்
தேடுகிறார் நினைத்தபடி
சரிம்மா இனிமேல்
ஒழுங்காக காவல்
செய்கிறேன் என
சொன்னபடி நகர்ந்தார்
ஃபுரூட் சாலட் செய்ய
கையில் ஆப்பிளை
எடுத்த கங்காவை
பார்த்துதோலை உரி
ரத்தம் வரப்போகிறது
என்று கத்தினேன்
அவளோ கன்னத்தையா
உரிக்கிறேன்
பழத்தை உரிக்க
ஏன் பதற்றப்படுகிறேன்
என கேட்டாள்
அவளிடம் சொல்லவில்லை
அது அவரின் கன்னம்
போல தெரிவதை!
என் கண்களுக்கு
என்னதான் ஆயிற்று
எதுவும் சரிவர
தெரியவில்லையே
யாரிடம் சொல்வது
எவரை கேட்பது?
Compliments:
Labels:
குறள் கவிதைகள்

Saturday, 25 March 2023
மோதி அந்தாதி
ஜனநாயகத்தை
விழுங்கும்
கிரகணமே
போற்றி போற்றி
வாய்சொல்லில்
வீரனே போற்றி போற்றி
வடைமாலை
நாயகனே
போற்றி போற்றி
பொய்மொழி வேந்தனே
போற்றி போற்றி
பொறாமையில்
தகிப்பவனே
போற்றிபோற்றி
கொலைவெறி
கொண்டவனே
போற்றி போற்றி
தலைவலியாய்
வந்தவனே
போற்றி போற்றி
இந்தியாவை
சீரழிக்கும்
ஏழரையே போற்றி
அதானியை
வாழவைக்கும்
அடிமுட்டாளே போற்றி
வஞ்சம்நிறை வேந்தனே
போற்றி போற்றி
வறுமையை
தந்தவனே
போற்றி போற்றி
எதேச்சதிகார எச்சமே
போற்றி போற்றி
எல்லோரையும்
வாட்டி வதைக்கும்
ஈனப்பிறவி
போற்றி போற்றி
நாளொரு அலங்காரம்
பொழுதொரு நாடு சுற்றும்
நடிகனே போற்றி போற்றி
எதிர்ப்போரை எல்லாம்
நசுக்கி புதைக்கும்
எமனே போற்றி போற்றி
சனியனே போற்றி
சகுனியே போற்றி
பீடையே போற்றி
பீளையே போற்றி
பிள்ளை உண்ணும்
சுடுகாட்டு முனியே போற்றி
ஆணவ மனிதா போற்றி
அகங்கார மிருகமே போற்றி
விழுங்கும்
கிரகணமே
போற்றி போற்றி
வாய்சொல்லில்
வீரனே போற்றி போற்றி
வடைமாலை
நாயகனே
போற்றி போற்றி
பொய்மொழி வேந்தனே
போற்றி போற்றி
பொறாமையில்
தகிப்பவனே
போற்றிபோற்றி
கொலைவெறி
கொண்டவனே
போற்றி போற்றி
தலைவலியாய்
வந்தவனே
போற்றி போற்றி
இந்தியாவை
சீரழிக்கும்
ஏழரையே போற்றி
அதானியை
வாழவைக்கும்
அடிமுட்டாளே போற்றி
வஞ்சம்நிறை வேந்தனே
போற்றி போற்றி
வறுமையை
தந்தவனே
போற்றி போற்றி
எதேச்சதிகார எச்சமே
போற்றி போற்றி
எல்லோரையும்
வாட்டி வதைக்கும்
ஈனப்பிறவி
போற்றி போற்றி
நாளொரு அலங்காரம்
பொழுதொரு நாடு சுற்றும்
நடிகனே போற்றி போற்றி
எதிர்ப்போரை எல்லாம்
நசுக்கி புதைக்கும்
எமனே போற்றி போற்றி
சனியனே போற்றி
சகுனியே போற்றி
பீடையே போற்றி
பீளையே போற்றி
பிள்ளை உண்ணும்
சுடுகாட்டு முனியே போற்றி
ஆணவ மனிதா போற்றி
அகங்கார மிருகமே போற்றி
Labels:
Political : Opinion

Subscribe to:
Posts (Atom)
மாணிக் பாட்ஷா
மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...
-
Lines and Material conventions 1. Demonstration of various lines and material conventions 2. Sheet no 1. Draw the conventions of lines and...
-
What is Engineering Drawing? In engineering drawing, engineering-related objects like buildings, walls, electrical fittings, pipes, machin...
-
Orthographic Projection exercises Draw front view, top view ,side view of the following exercises Problem 1 Problem 2 ...
-
Technical Lettering Syllabus: 1. Introduction to lettering and its necessity. Demonstrate the construction details of Engli...