இடதாய் தலைசாய்த்து குறும்பாய் பார்த்து மனதுக்குள் மழை தந்தாய் இடுப்பில் கைவைத்து முழுதாய் முறைக்கையில் நானொன்றும் செய்யலடி கதற வைத்தாய் வலப்பக்கம் திரும்பி எங்கோ வெறிக்கையில் சாரிடி சாரிடி நூறுமுறை சொல்லவைத்தாய் கண்கள் சந்தித்த நொடிப்பொழுதில் தீராத நோயுற்றேன் பாவம் நான் விட்டுவிடு! எத்தனை முறை போர்தொடுப்பாய் எத்தனை வகை சேனை வைப்பாய்.
மழை கண்டு ஆடும் மயிலின் அசைவும் மாதுவின் காதோரம் காதணியின் அசைவும் வாக்கு கேட்பதேன்? ஓருள்ளம் உள்ள நான் யாரை தேர்ந்தெடுப்பேன்! மயில் அழகு என்றால் மாது மனம் வாடாதா மாதுவே அழகு என்றால் மயில் தோகை சுருங்குமே பாப்பையா கொஞ்சம் தீர்ப்பு சொல்லுங்களேன்!