Showing posts with label குறள் கவிதைகள். Show all posts
Showing posts with label குறள் கவிதைகள். Show all posts

Saturday 4 March 2023

குறள் 1199

கோபம்
என்றால்
கொட்டிவிடு

சனியனே
சொல்லும்
தித்திக்கும்

மௌனம்
மட்டும்
காக்காதே

வருத்தம்
என்றால்
சொல்லிவிடு

முகத்தை
மட்டும்
திருப்பாதே

எதிரெதிரே
சந்திக்கையில்

நலமா என்று
கேட்கவேண்டாம்

ஏறெடுத்தாகிலும்
பார்த்துவிடு

அப்பாவா
காதலா
குழப்பத்தில்
அப்பாவை
தேர்ந்தது
தவறுதான்!



Friday 3 March 2023

குறள் : 1198

பிரியும்போது
தந்த முத்தத்தின்
ஈரம் காயாமல்
தினந்தோறும்
கண்ணீரால்
நனைத்து
காத்துவருகிறேன்
தெருமுனைவரை
திரும்பி திரும்பி
பார்த்து சென்றதும்
முனையில்நின்று
கையசைத்து
சென்றதும்
கண்ணைவிட்டு
அகலாமல்
காட்சியாக நிற்கிறது
'இன்று வருகிறேன்'
என்ற இனிப்பான
செய்தி கேளாமல்
கற்சிலையாய் நான்!

Comments : 

குறள் : 1196

இன்றைய 
நீதிதேவதையின்
தராசு அதிகமாக
வலப்பக்கம்
சாய்ந்ததால்
பணத்திற்காக
பதவிக்காக
சாய்க்கப்பட்டதால்
பாரதமாதா
களையிழந்து
வாடுகிறாள்
எந்தபக்கமும்
சாயாத 
நீதி தராசு
எல்லாரும்
விரும்புவதுபோல்
சமநிலை தவறாத
இருவரும்
நேசிக்கும்
காதலே
தலைசிறந்த
காதலாகும்
ஒருதலைக்காதல்
உவகை தராது!

குறள் : 1197

சூரியன் 
பூமியின்மீது
பாதி ஒளியை
வீசி பகலாக்கி
மீதி பூமியை
இரவாக்கி
இருளை
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
அதுபோல
நிலாமகள்
மீதும் கதிரை 
வீசாமல்
அமாவாசை
ஆக்கி இருள்
படரவைத்து
இன்னலில்
ஆழ்த்துகிறது.
சூரியனும்
காமனும்
ஒன்றா?

பூமி
நிலா
பெண்
இருட்டால்
பசலையால்
வதைக்கப்படுன்றனர்!

Tuesday 28 February 2023

குறள் 1195

என் பொழுதின்
பாதிகளை
உன்னோடு
கழிக்கிறேன்
நிமிடங்கள்
கூட கழிவதில்லை
நீயின்றி
உன் நினைவின்றி
வேலைகளை
தள்ளிவைத்து
உன்னை
கைகளில் ஏந்தி
சீராட்டுகிறேன்
ஆனால் பதிலுக்கு
நீ தருவது
என்னவோ
தலைவலியும்
தூக்கமின்மையும்
என்மீது உனக்கு
அன்பே இல்லையா
அக்கறையே இல்லையா
இதயமில்லாத போனே!

Comments : 

Monday 27 February 2023

குறள் 1194


நாள்முழுதும்
வாராத
குறுஞ்செய்தி
சொல்லும்
நான் உனக்கு
முக்கியமில்லை
என்பதை!

தாமதமாய்
வரும் பதிலில்
தெரியும்
என் கேள்விகள்
உனக்கு
பிடிக்கவில்லை
என்று!

என்சொல்லையும்
செயலையும்
பாராட்ட ஆயிரம்
மனிதர்கள்
இருந்தாலும்

ஆன்றோரே
புகழ்ந்தாலும்

நீ சொல்லும்
ஒற்றை வார்த்தை தானே
எனது பொக்கிஷம்!

உன் குரல்தான்
எனக்கு சுப்ரபாதம்
என்றாலும்

Pixel by Pixcel
உனை பிரித்து 
ரசித்தாலும்

உலகம் நீயென
உன்னையே
சுற்றினாலும்

நான் உன்
இதயத்தில்
ராணியில்லை
என்றால்
என்னைவிட
துரதிஷ்டசாலி
யாரும்
இருக்கமுடியாது!

உலகமே 
சொன்னது
நான்
அதிஷ்டசாலி
என்று!

ஆனால் 
உன் இதயம்
நுழையமுடியாத
துரதிஷ்டசாலி
என்பதை
நீயும் நானும்
அன்றி
வேறொருவர்
அறியார்!


Sunday 26 February 2023

குறள் : 1193


இலையுதிர்காலத்தில்
இலையிழந்து
களையிழந்து
பிரிவால் வாடும்
மரங்களே
ஆணிவேர்
இருப்பதை
மறந்தீரோ
அடுத்த பருவத்தில்
துளிர்விட்டு
செழிக்கவைக்க
நானிருப்பதை
வேர் இருப்பதை
வேர் என
காதல் இருப்பதை
மறந்தீரோ
காதலினால்
மீண்டும்
சேர்வோம்
பிரிவு தற்காலிகமான
பருவநிலை தானே
காத்திருந்து
காதலிப்போம்!

வெயில்காலத்தில்
வறண்டுபோன
குளத்தைகண்டு
கலங்கமாட்டேன்
அடுத்து வருகிறதே
மழைக்காலம்
நிரம்பிவழியும்
நீரில் நான்
இன்பமாக 
மிதந்திருப்பேன்
வெயிலும் மழையும்
இயற்கையெனில்
பிரிவும் சேர்வும்
இயற்கைதானே
பிரிவுக்காக நான்
வருந்தபோவதில்லை
வரப்போகும்
இன்பமழைக்காக
காதலோடு
காத்திருப்பேன்!

அரியணையில்
அமரமுடியாமல்
அடுத்தடுத்து
தோற்றாலும்
மக்கள் மீது
கொண்ட நம்பிக்கை
அடுத்த தேர்தலில்
வெல்லவைக்கும்
காதலர் பிரிவும்
அப்படித்தான்
அவர்மீது வைத்த
நம்பிக்கை
அடுத்த வருடத்தில்
இணைந்திட 
வழிவகுக்கும்.
தேர்தலில் தோல்வியும்
காதலரின் பிரிவும்
நிரந்தரமானதல்ல!

Comments : 

Saturday 25 February 2023

குறள் 1192

அரிசியும் கோழியும்
சந்திப்பதால்
கிடைக்கும்
சுவையான 
பிரியாணி போல

தேயிலையும்
ஏலக்காயும்
சந்திப்பதால்
கிடைக்கும்
சுவையான 
தேநீர் போல

கடலைமாவும்
சர்க்கரையும்
சந்திப்பதால்
கிடைக்கும்
மைசூர்பாக் போல

அவனும் அவளும்
சந்தித்து இன்புறுதல்
வானம் பார்த்த
பூமிக்கு கிடைத்த
மழையாக இருக்கிறது

Friday 24 February 2023

குறள் 1191


பண்டிகைக்கு
வாங்கி தந்த
பட்டு அல்ல
அவர் அன்பு
அதை கட்டும்போது
சொல்லும் வார்த்தை
ஜொலிக்கிறடி
என்பதில் மின்னும்
அவர் அன்பு

வாங்கி தந்த
நகையணிந்து
கோவிலுக்கு
போகையில்
அம்மனோடு
போட்டியாடி என
நகைக்கும்போது
மிளிரும் அவர் அன்பு


சளிபிடித்து
படுக்கையில்
ஆவிபிடி என்று
சொல்லி
காலருகில்
வைக்கும்
கொதிநீரில்
தெரியும்
அவர் அன்பு

நேசம் சமமாக
கொடுத்தும்
வாங்கும்
அன்பர் உண்டெனில்
விதையற்ற கனியாக
இனிக்கும்
அந்த உறவு....

Thursday 23 February 2023

குறள் : 1190

என்னை
ஏமாற்றி
சாக்லெட்
பிடிங்கிதின்ற
அவனை
ஏமாற்றுக்காரன்
என ஊர்
பழிக்காது எனில்
நான் ஏமாளி
பட்டத்தை
சிரிப்போடு
ஏற்கிறேன்!

ஆசைகாட்டி
ஓட்டுவாங்கி
பதவியில்
அமர்ந்தபின்
ஏமாற்றி 
பிழைப்பவரை
ஏமாற்றுக்காரன்
என மக்கள்
சொல்லார் எனில் 
நான் இளிச்சவாய்
குடிமகள் என
பேர்வாங்க
தயங்கமாட்டேன்!

Wednesday 22 February 2023

குறள் : 1189

பிரிவையே 
பொறுத்த எனக்கு
பசலை ஒன்றும்
பெரிதல்ல!

உயிரின்றி
உடல் வாழாதாம்
யார் சொன்னது
இதோ நான்
வாழ்கிறேனே!

தூரம் இருப்பதால்
நிலவு சலித்திடுமா
சூரியன் கசந்திடுமா

நலமாக நீ இருக்க
டேட்டாவாகி
வருவேன்
வீடியோவாகி
வருவேன்

பசலை தான்
பரிசெனில் 
தயக்கமின்றி
ஏற்பேன்!

Comments received :

Monday 20 February 2023

குறள் : 1187

வள்ளுவரே
என் காதலர்
புவியீர்ப்பு
விசையாய்
இழுப்பவர்தான்
ஆனால்
அவரிலே
மயங்கி கிடந்து
பசலை கண்டு
பயந்து
அவரோடு
இருந்தால்
எங்கள் வயிரும்
வாழ்வும்
நிறைந்திடுமா?
நீர் எம் பெண்குலத்தை
வலிமையற்றவராய்
பொறுமையற்றவராய்
பொறுப்பற்றவராய்
கருதிவிட்டீரோ?
பசலையை ஏன்
ஆணுக்கு தரவில்லை?

Comments: 

Sunday 19 February 2023

1186

ஆண்பிடி
இறுகும்போது
எரியும்
மின்சார 
விளக்கு 
பெண்
பிடிதளரும்போது
அணையும்
விளக்கும்
அவள்!
அவன் எரிபொருள்
அவள் எரிபவள்
பெண் பாஸிட்டிவ் டெர்மினல்
ஆண் நெகட்டிவ் டெர்மினல்
அருகில் வரும்நேரம்
பாயும் ஹை வோல்டேஜ்
மின்சாரம்!

Comments :

Saturday 18 February 2023

குறள் 1185

ப்ரிட்ஜில்
வைக்க மறந்த
இனிப்பு பண்டம்
ஒரே நாளில்
கெடுவதை போல
அவரை பிரிந்த
அடுத்த நாளே
உடலும் உள்ளமும்
கெடுவதேன்?

ஆக்சிஜன்
இன்றி
மூச்சிறைக்கும்
ஆஸ்த்மா நோயாளி
ஆகிறேன் நான்!

தரைக்கு வந்த மீனாக
வலையில் சிக்கிய புழுவாக
தவித்து போகிறேன் நான்!

பரிட்சை எழுதிவிட்டு
ரிசல்டு வர
காத்திருக்கும்
மாணவி போல
அவரை வழியனுப்பிவிட்டு
வருகைக்காக
காத்திருக்கிறேன்.

Friday 17 February 2023

குறள் 1184

நொடிகளை
விழுங்கும்
சுறா மீன்
உன் நினைவுகள் 

அலையாய்
முன்னும்
பின்னும்
வந்து
என் மூளையை
தொட்டுச்செல்கிறது
உன் வதனமும்
வேடிக்கை பேச்சும்! 

பேசுவதெல்லாம்
உன் குணங்களை
போற்றித்தான்
அஞ்சாதவன்
அசராதவன்
அழகானவன்
நேர்மையானவன்!

இதற்கு பரிசாக
உன்னையே
தராமல்
பசலையை
ஏன் தந்தாய்?

Comments received:

குறள் : 1181

அன்பே விகாஸ்
எங்கிருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
உன்னை பிரிந்து
ஒன்பது வருடங்கள்
ஆகிறதே
ஒருநாள் கூட
எனைபார்க்க
தோன்றவே
இல்லையா?
உனைபார்க்காமல்
என் தேகம்
மெலிந்து
தீபிகாவாய்
ஆனது
என்னென்ன
கற்பனைகள்
வளர்த்தோம்
அத்தனையும்
மறந்தாயோ
இருவரும்
இணைந்து
2023 இல்
வல்லரசை
சந்திக்கலாம்
என்று ஆசை
காட்டினாயே
இன்று நான்
சோற்றுக்கு
வழியின்றி
மாதம் 5 கிலோ
இலவச அரிசி
வாங்கி வாழ
நேர்ந்ததே!
இருந்தாலும்
உன்னை
நேசிக்கிறேன்
இன்று நாம்
சந்தித்த நாள்
அன்றோ
Happy Valentine's Day
My dear Vikas Maama!
Please come soon
I am dying slowly.......

- சங்கிராணி

Thursday 16 February 2023

குறள் : 1183

வரிசையாய்
உண்டு வேலைகள்
மனம் எதிலும்
செல்லவில்லை
வகைவகையாய்
உண்டு பலகாரம்
எதையும் உண்ண
நாட்டமில்லை
உறவாட ஆயிரம்
உறவுகள் உண்டு
பேசத்தான்
விருப்பமில்லை
உட்கார்ந்தோ
படுத்தோ நேரம்
கழிகிறது
எங்கோ வெறித்தோ
பார்வையோடு
என்ன மாயம்
செய்தாய்
எனை பித்தாக்கினாய்
காதல் பட நாயகனாக
தெருவெல்லாம்
அலைவேனோ
சேது விக்ரமாகி
கீழ்ப்பாக்கம்
செல்வேனோ
என்ன செய்வதாக
உத்தேசம் என்னவனே!
காதல்நோய் தந்து
கண் மறைவது சரியா?

Monday 13 February 2023

குறள் : 1180

மறைக்கவே
நினைக்கிறேன்
அவன் மீதான
அன்பை காதலை
ஊர் பழிக்கும்
என்று!
ஆனாலும்
என் கண்கள்
காட்டிக்கொடுத்து
விடுகின்றன
ஹின்டன்பெர்க்
அறிக்கையை போல
லட்சங்களில்
செலவுசெய்கிறேன்
நிஜமுகத்தை
மறைத்துக்கொள்ள
அவனுடனான
அன்பை நட்பை
அகத்தில் வைத்திருக்க
ஆனாலும் கண்கள்
கலங்கி கண்ணீராக
வெளிவந்துவிடுகின்றன

Comments received : 

Saturday 11 February 2023

குறள் : 1178

கண்ணே
மணியே 
மட்டுமா 
சொன்னார்?
வீடு தருவேன்
விகாஸ் தருவேன்
வேலை தருவேன்
லட்சம் தருவேன்
வாழ்வையே
எனக்காக
அர்ப்பணிப்பேன்
என்று சொன்னார்
நானும் நம்பி
வாக்களித்தேன்
வாழ்க்கையையும்
அடகுவைத்தேன்
அந்தோ பரிதாபம்
எல்லாம் போனது
ஆனாலும் இந்த
பாழாய்போன
கண்கள் அவரை
காண ஏங்குவதேன்?

- சங்கி


Comments received : 

சுயமதிப்பீடு

தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...